Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
காசி ஸ்பெஷல் ஷோவில் சிம்பு: 'இளையதளபதி விஜய்க்கு நன்றி' கார்டுடன் தொடங்கியது படம்!
காசி திரையரங்கில் நடக்கும் வாலு படத்தின் சிறப்புக் காட்சி பார்க்க இன்று காலை தியேட்டருக்கு வந்தார் நடிகர் சிம்பு. அவரை ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
சிம்பு நடித்த வாலு திரைப்படம் பல்வேறு சிக்கல்களைத் தாண்டி இன்று வெளியாகிறது.
இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி இன்று காலை 10 மணிக்கு காசி திரையரங்கில் தொடங்கியது.
காலை 4 மணிக்கும், 8 மணிக்கும் சிறப்புக் காட்சி போட இதே திரையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ரசிகர்களும் ஆர்வத்துடன் டிக்கெட் வாங்கி வந்திருந்தனர். ஆனால் அந்த இரு காட்சிகளும் ரத்தாகிவிட்டன.
இந்த நிலையில் 10 மணிக்கு சிறப்புக் காட்சி நிச்சயம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் படத்தின் நாயகன் சிம்பு, உடன் நடித்த ஜெய் உள்ளிட்டோரும் தியேட்டருக்கு வந்தனர்.
சிம்பு வந்த சில நிமிடங்களில் படம் தொடங்கியது. இளையதளபதி விஜய்க்கு நன்றி என்ற டைட்டில் கார்டுடன் படம் ஆரம்பிக்க, ரசிகர்களின் ஆர்ப்பாட்டத்தை ரசித்தபடி பால்கனியில் அமர்ந்து பார்க்க ஆரம்பித்தார் சிம்பு.