வாழ்த்து மழையில் புதுமனை புகுந்த சிவகார்த்திகேயன்
சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான சிவகார்த்திகேயன் புதிய வீடு ஒன்றை சென்னை கே.கே. நகரில் கட்டி வந்தார், முழுவதும் கட்டி முடிக்கப் பட்ட அந்த வீட்டில் இன்று கிரகப்பிரவேசம் நடத்தி குடிபோயிருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒருசிலருக்கு மட்டும் அழைப்பு விடுத்த சிவா, இன்று வீடு குடிபுகுந்ததைக் கேள்விப்பட்ட சினிமாத் துறையுலகினர் பலரும் வாழ்த்துகளைத் தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இயக்குனர் பாண்டிராஜின் மெரினா படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான சிவகார்த்திகேயன், தொடர்ந்து நடித்த 6 படங்களிலேயே தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். ஏராளமான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன் நடிப்பால் கவர்ந்த சிவகார்த்திகேயனின் சொந்த ஊர் திருச்சியாகும்.
சிவாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் ரஜினிமுருகன் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பொன்ராமுடன் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். படத்தில் சூரி,சமுத்திரக் கனி மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
புதுவீட்டுக்கு தனுஷை கூப்பிட்டிங்களா சிவா........


Click it and Unblock the Notifications











