Don't Miss!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- News வெறும் 15 நிமிடம் தான்.. உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையால் புதுச்சேரி இளைஞர் பலி.. என்ன நடந்தது?
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
விஜய்யை மீண்டும் இயக்க ஆசை - எஸ் ஜே சூர்யா
நடிகர் விஜய்யை வைத்து மீண்டும் படம் இயக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா.
வாலி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ் ஜே சூர்யா. அடுத்தடுத்து தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்தவர்.
மிக இக்கட்டான நேரத்தில் விஜய்க்கு குஷி என்ற மெகா ஹிட் படத்தைத் தந்தவர்.
மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு எஸ்.ஜே. சூர்யா நடித்து, இயக்கி, இசையமைத்து உருவாக்கியுள்ள இசை படம் இன்று வெளியாகியுள்ளது.
இந்த நிலையில்தான் மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
குஷி படத்துக்குப் பிறகு விஜய்யும் எஸ் ஜே சூர்யாவும் இணைந்து புலி என்ற பெயரில் படம் உருவாக்கத் திட்டமிட்டிருந்தனர். இதுகுறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
ஆனால் பல காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. அந்தத் தலைப்பைத்தான் இப்போது சிம்பு தேவன் இயக்கும் விஜய் படத்துக்கு சூட்டியுள்ளனர்.
விஜய்யை வைத்து படம் இயக்குவது குறித்து எஸ் ஜே சூர்யா கூறுகையில், "நானும் விஜய்யும் இணைந்து பணியாற்றி பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருந்தாலும் விஜய் என்னுடைய படத்தின் பாடல்களை வெளியிட்டது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவருடன் இணைந்து மீண்டும் ஒரு படம் செய்ய விரும்புகிறேன்," என்றார்.