Don't Miss!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வந்தனாவுடன் சேர்ந்து வாழ ஸ்ரீகாந்த் திட்டம்?
வந்தனா தொடர்ந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்ற நடிகர் ஸ்ரீகாந்த் இன்று காலை சென்னை வடபழனி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்துப் போட்டார்.
தனது வீட்டுக்குள் புகுந்துள்ள வந்தனா மீது வழக்குப் பதிவு செயது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீகாந்த் தரப்பில் வழக்கு போடப்பட்டது.இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் வந்தனா மீது வடபழனி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து உயர்நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்றார் வந்தனா. மேலும் உயர்நீதிமன்ற உத்தரவின் படி, வடபழனி காவல் நிலையத்தில் நேற்று ஆஜராகி கையெழுத்திட்டார்.
இந்த நிலையில், வந்தனா கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீகாந்த் மீதும் வடபழனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீகாந்த், தந்தை கிருஷ்ணமாச்சாரி, தாயார் ஜெயந்தி ஆகியோருக்கு முன்ஜாமீன் கிடைத்தது.
அதன் அடிப்படையில் இன்று காலை வடபழனி காவல் நிலையத்திற்கு ஸ்ரீகாந்த் வந்தார். இன்ஸ்பெக்டர் முன்னிலையில் கையெழுத்துப் போட்ட அவரிடம் சிறிது நேரம் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் ஸ்ரீகாந்த் வெளியே வந்தார்.
நீண்ட தாடி, குடுமியுடன் காணப்பட்ட ஸ்ரீகாந்த்த்தை காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன் செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு கேட்டபோது,
இதுவரை நடந்தது எல்லாம் பத்திரிக்கைகள் மற்றும் டி.வி. வழியாக எல்லோருக்கும் தெரியும். புதுசாக ஒன்றும் சொல்வதற்கில்லை.
எங்கள் வீட்டுக்கு செல்வதை யாரும் தடுக்க முடியாது. நாங்கள் தான் வீட்டுக்கு போகாமல் இருக்கிறோம். 85 வயதான என் பாட்டி அந்த வீட்டில் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்றார் ஸ்ரீகாந்த்.
முன்னதாக காவல் நிலையத்தில் போலீஸார் நடத்திய விசாரணையின்போது, எனது திருமணத்தை மறைக்க நினைத்தததில்லை. ஊரறிய சிறப்பாக நடக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்குள் பல நிகழ்ச்சிகள் நடந்து விட்டன.
வந்தனாவுடன் சேர்ந்து வாழ்வது குறித்து யோசித்துக் ெகாண்டுள்ளேன் என்று கூறினாராம் ஸ்ரீகாந்த்.
வந்தனாவையும், ஸ்ரீகாந்த்தையும் சேர்ந்து வாழ வைக்க கவுன்சிலிங் மூலம் முயற்சிக்கப்படும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!