Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நடிகர் சங்கத்திற்கு ரூ.10 லட்சத்தை வாரி வழங்கிய சூர்யா
சென்னை: நடிகர் சங்கத்தின் நலனுக்காக ரூபாய் 10 லட்சத்தை நடிகர் சூர்யா நன்கொடையாக அளித்தார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
பல போராட்டங்கள், பிரச்சினைகள், மோதல்கள் ஆகியவற்றிற்குப் பின்னர் நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற பின்னர் இன்று முதல் செயற்குழு கூட்டத்தை சென்னையில் பிரபல நட்சத்திர ஹோட்டலில் நிர்வாகிகள் நடத்தினர். இதில் நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு நடிக, நடிகையர் கலந்து கொண்டனர்.
செயற்குழு கூட்டத்தின் முடிவில் புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், நடிகர் சூர்யா நடிகர் சங்கத்தின் நலனுக்காக ரூ.10 லட்சம் நன்கொடை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இவ்வாறு நடிகர்கள் அளிக்கும் நன்கொடையை சங்கத்தின் நலனுக்காக செலவிட புதிய நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் "நடிகர் சங்கக் கட்டிடத்தை கட்டுவதற்காக கலை நிகழ்ச்சி நடத்த மாட்டோம்.
இளம் நடிகர்கள் சேர்ந்து தனியாக சினிமா எடுத்து நிதி திரட்டுவோம், நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி நிதி திரட்டுவோம் என்று தெரிவித்திருக்கிறார்.
19 கிரவுண்டில் அமைந்த இந்த இடத்தில் சினிமா தொடர்பான நிகழ்ச்சியை நடத்த வழிவகை செய்யப்படும் என்றும், மூத்த நடிகர்களின் ஆலோசனையின் பேரில் இந்தக் கட்டிடம் கட்டப்படும்" என்றும் விஷால் தெரிவித்திருக்கிறார்.