Don't Miss!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் சூர்யா
கமல்ஹாசனை வைத்து இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தசாவதாரம் படத்தை இயக்கி முடித்துள்ள கே.எஸ்.ரவிக்குமார், அடுத்த படத்திற்கு ஆயத்தமாகி வருகிறார்.
இதுதொடர்பாக சூர்யாவுடன் அவர் பேசியுள்ளார். இருவரும் இணைந்து புதிய படத்தைக் கொடுக்கப் போகின்றனர். இருவரும் இணைவது இது முதல் முறை என்பதால் இப்படம் குறித்து எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
வாரணம் ஆயிரம் படத்ைத முடித்துக் கொண்டிருக்கும் சூர்யா அடுத்து ஏவி.எம்மின் பெயர் சூட்டப்படாத படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை முடித்து விட்டு ரவிக்குமார் படத்திற்கு அவர் வரவுள்ளார்.
ஏற்கனவே அஜீத்தை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்புக் கொண்டுள்ளார். ஒரே நேரத்தில் சூர்யா மற்றும் அஜீத் படங்களை இயக்கப் போகிறாராம் ரவிக்குமார்.
சூர்யா, கே.எஸ்.ரவிக்குமார் இணையும் புதிய படத்தை சூர்யாவின் நெருங்கிய உறவினரான ஞானவேல் தயாரிக்கிறார். இவர்தான் சில்லுன்னு ஒரு காதல், பருத்தி வீரன் ஆகிய படங்களை தயாரித்தவர் என்பது நினைவிருக்கலாம்.