Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'கபாலி' ரஞ்சித் இயக்கத்தில் 'பாக்ஸராக' நடிக்கும் சூர்யா?
சென்னை: 'கபாலி' ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா பாக்ஸராக நடிக்கப் போகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
'அட்டகத்தி', 'மெட்ராஸ்' படங்களைத் தொடர்ந்து ரஜினியின் கபாலியை இயக்கிய ரஞ்சித் அடுத்ததாக சூர்யாவை இயக்கவிருக்கிறார். 'மெட்ராஸ்' படத்துக்குப் பின் சூர்யாவை இயக்கவிருந்த ரஞ்சித்திற்கு ரஜினி பட வாய்ப்பு கிடைத்ததால், சூர்யாவிடம் சொல்லிவிட்டு கபாலியை இயக்க சென்றார்.
தற்போது 'கபாலி' வெளியாகி விட்டது. தொடர்ந்து சூர்யாவை இயக்கவிருக்கிறார். சூர்யா நடித்து வரும் 'எஸ் 3' படத்துக்குப் பின் ரஞ்சித் படத்தில் அவர் நடிப்பார் எனத் தெரிகிறது.
'எஸ் 3' படத்தில் போலீசாக நடித்து வரும் சூர்யா அடுத்ததாக பாக்ஸர் வேடத்தில் நடிக்கப் போகிறாராம். இதற்காக தனது உடல் எடையை சூர்யா அதிகரிக்கப் போவதாக கூறப்படுகிறது.
வட சென்னை பகுதிகளில் வாழும் பாக்ஸர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தின் கதையை ரஞ்சித் எழுதியிருக்கிறாராம். இந்த வருட இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
இதுவரை சூர்யா எந்தப் படத்திலும் பாக்ஸராக நடித்ததில்லை என்பதால் இப்படம் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.
சூர்யா படத்துக்குப் பின் மீண்டும் கார்த்தியை ரஞ்சித் இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.