Don't Miss!
- News புறம்போக்கு நிலம்.. நத்தம் இருக்கட்டும்.. புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கலாமா? அரசு சொல்வது என்ன
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்... டிசம்பர் 17ல் ரிலீஸ்?
சென்னை : நடிகர் சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துவரும் படம் எதற்கும் துணிந்தவன்.
இந்தப் படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தம் வழிய கையில் சுத்தியல் உடன் விஷ்ணு விஷால்... மோகன்தாஸ் செகண்ட் லுக் வெறித்தனமாக தயார்!
இந்நிலையில் படத்தை வரும் டிசம்பர் 17ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா கோலிவுட்டில் தொடர்ந்து தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார். தற்போது அவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் ஜெய் பீம் வரும் நவம்பர் 2ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் அநீதியை எதிர்த்து போராடும் வழக்கறிஞராக அவர் நடித்துள்ளார்.
எதற்கும் துணிந்தவன்
தொடர்ந்து வாடிவாசல், பாலா இயக்கத்தில் ஒரு படம் மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் சூர்யா கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடித்துவரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் சூட்டிங் 80 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
டிசம்பர் 17ல் ரிலீஸ்?
இதையடுத்து படத்தை வரும் டிசம்பர் 17ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இம்மாதத்திற்குள் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்ய பாண்டிராஜ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணிற்கு நீதியை பெற்றுத்தர சூர்யா தனியாளாக போராடுவதாகவும் அவர்களை பழிவாங்குவதாகவும் கதை நகர்வதாக கூறப்பட்டுள்ளது.
கிராமத்து கெட்டப்
படத்தில் கிராமத்து கெட்டப்பில் சூர்யா நடித்துள்ளார். அவருக்கு பிரியங்கா அருள் மோகன் ஜோடியாகியுள்ளார். மேலும் சூரி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய் ராஜ் மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் படத்தில் நடித்து வருகின்றனர். ஒளிப்பதிவை எந்திரன் புகழ் ரத்னவேலு மேற்கொண்டுள்ளார். வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு சூர்யாவுடன் இவர் இணைந்துள்ளார்.
Recommended Video
இமான் இசை
படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ரூபன் எடிட்டிங்கை கவனித்துக் கொள்ள, சன் பிக்சர்ஸ் படத்தை தயாரித்து வருகிறது. படத்தின் மோஷன் போஸ்டர் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. மேலும் எதற்கும் துணிந்தவன் என்ற இந்த தலைப்பு சூர்யாவின் தந்தை சிவக்குமார் நடிப்பில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயல்பான கேரக்டர்
பாண்டிராஜ் எப்போதுமே இயல்பான கேரக்டர்களை தன்னுடைய படங்களில் உலவ விடுவார். அதேபோல இந்தப் படத்திலும் இயல்பான மற்றும் எளிமையான சூர்யாவை பார்க்க முடிகிறது. ஆனால் போஸ்டர்களில் அவர் கையில் அரிவாளுடன் காணப்படுவது படத்தின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.