Don't Miss!
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விஜய் 59: செல்லாக்குட்டி எனக் கொஞ்சிய விஜய்
சென்னை: அட்லீயின் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் விஜய் 59 படத்தில் செல்லாக்குட்டி என்று தொடங்கும், ஒரு டூயட் பாடலை நடிகர் விஜய் பாடியிருக்கிறார்.
இந்தத் தகவலை படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருக்கிறார். தலைவா, கத்தி, புலி படங்களில் ஒரு பாடலைப் பாடிய விஜய் இந்தப் படத்திலும் பாடகராக மாறியிருக்கிறார்.
Ilayathalapathy sings his first song for #VJ59 #GV50 the song will be called as #chellaakutty ❤️ pic.twitter.com/PB4oxu00oO
— G.V.Prakash Kumar (@gvprakash) October 29, 2015
படத்தின் தலைப்பு இன்னும் உறுதியாகாத நிலையில் படப்பிடிப்பானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ‘செல்லாக்குட்டி' என்று தொடங்கும் அந்த பாடல் ரொமான்ஸ் கலந்த குத்துப்பாடலாக உருவாகியிருக்கிறதாம்.
It's a dance duet .Visuals rockd by @Atlee_dir d song is called as #chellaakutty not #chellakutty ❤️💫 #chellaakutty pic.twitter.com/gpjszkGLog
— G.V.Prakash Kumar (@gvprakash) October 29, 2015
இந்த படத்தில் மொத்தம் இரண்டு பாடல்களை விஜய் பாடவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
வழக்கமாக தனது படங்களில் 1 பாடலைப் பாடும் விஜய் இந்தப் படத்தில் 2 பாடல்களைப் பாடி ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளார். மற்றொரு பாடல் என்ன என்பது குறித்து இன்னும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
விஜயின் 59 படமாக உருவாகி வரும் இப்படம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 50 வது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இசை மற்றும் பாடல்கள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.