Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எதுக்கு வம்பு... பிறந்த நாளன்று சென்னையில் இருப்பதைத் தவிர்த்த விஜய்!
தனது ஒவ்வொரு பிறந்த நாளன்றும் ரசிகர்களைச் சந்திப்பது, நல்லத்திட்ட உதவிகள் வழங்குவது, எழும்பூர் மருத்துவமனைக்குப் போய் புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் போடுவது... இவைதான் விஜய்யின் வழக்கமான செயல்கள்.
ஆனால் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக அவர் இவற்றைச் செய்யவில்லை. ஏன், பிறந்த நாளையே ஆடம்பரமின்றி எளிமையாகக் கொண்டாடினார். ரசிகர்களைச் சந்திப்பதை முற்றாகத் தவிர்த்தார். அதற்கு ஏகப்பட்ட அரசியல் காரணங்களும் சொல்லப்பட்டன.
இந்த நிலையில் தனது இந்த ஆண்டு பிறந்த நாளன்று சென்னையிலேயே இருக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறது விஜய்.
இப்போது வெளிநாட்டில் விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருக்கும் விஜய், வரும் ஜூன் 25-ம் தேதிதான் சென்னை திரும்பப் போகிறாராம். அதாவது பிறந்த நாளான 22-ம் தேதி குடும்பத்துடன் வெளிநாட்டிலேயே இருக்கப் போகிறாராம் விஜய்.
ஆனால் அவர் ஊரில் இல்லையே என ஏங்கும் அவரது ரசிகர்களுக்காக ஒரு நற்செய்தி காத்திருக்கிறது. அது... அடுத்த நியூசாச்சே!!