Don't Miss!
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- News ஹலோ எங்க வீட்ல மொத்தம் 5 ஓட்டு.. சார் நான் ஈபி ரீடிங் எடுக்க வந்திருக்கேன்!
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உழைப்பாளர் தினத்தன்று 100 மூத்த கலைஞர்களுக்கு தலா ஒரு பவுன் தங்கம் கொடுத்த விஜய் சேதுபதி
சென்னை: எனக்கு தெரிந்து விஜய் சேதுபதி என்ற மனிதனுக்கு இதுவரைக்கும் மரியாதை இருந்ததே இல்லை. எனக்கு மரியாதையோ, அங்கீகாரமோ, அடையாளமோ அது சினிமா மட்டுமே என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
சினிமாவில் மூத்த கலைஞர்கள் 100 பேருக்கு தலா ஒரு புவன் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மே 1ம் தேதி சென்னையில் நடந்தது. 100 கலைஞர்களுக்கு தனது செலவில் நடிகர் விஜய் சேதுபதி தங்க பதக்கம் வழங்கினார்.
விழாவில் பேசிய அவர் கூறும்போது,
விஜய் சேதுபதி
இங்கு பேசிய அனைவருமே விஜய் சேதுபதி கொடுத்தார் கொடுத்தார் என்றார்கள். தமிழ் சினிமாவில் இருந்து எடுத்தேன், அதனால் அங்கேயே கொடுத்துவிட்டேன். எனக்கு தெரிந்து விஜய் சேதுபதி என்ற மனிதனுக்கு இதுவரைக்கும் மரியாதை இருந்ததே இல்லை. எனக்கு மரியாதையோ, அங்கீகாரமோ, அடையாளமோ அது சினிமா மட்டுமே.
நடிகன்
விஜய் சேதுபதி என்ற நடிகனுக்கு தான் சினிமாவில் மரியாதை. எங்கு சென்றாலும் சிரித்த முகத்தோடு வரவேற்கிறார்கள் என்றால் சினிமா எனக்கு கொடுத்த ஒரு பெரிய பாக்கியமாக பார்க்கிறேன். அதற்கு நன்றிக்கடன் செலுத்துவதற்கான வாய்ப்பை நண்பர், தோழர், அண்ணன் என்ன வேண்டும் என்றாலும் சொல்லலாம் ஜனநாதன் சார் கொடுத்துள்ளார். இந்த சிந்தனையை அவர் என்னிடம் கூறிய போது முதலில் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.
மகிழ்ச்சி
எங்கு சென்றாலும் சினிமா தான் எனக்கு எல்லாமே என சொல்லிக் கொண்டே இருப்போம். அந்த சினிமாவுக்கு நாம் என்ன செய்தோம் என ஒன்று உள்ளது. ஒருவர் நாயகனாகிவிட்டால் அவனை மதிக்கிற விதம், கொண்டாடுகிற விதம் என எனக்கு 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் மூலம் அனைவரிடமுமிருந்து வந்தது. எனது படங்களின் லைட் மேன், அரங்கு அமைப்பாளர்கள் என அனைவருமே மதித்தார்கள்.
மரியாதை
'தென்மேற்கு பருவக்காற்று' சமயத்தில் அப்படத்தின் லைட்மேன் தங்கியிருக்கும் விடுதிக்குள் சென்றேன். எனது முதல் படம், 10 நாட்கள் தான் படப்பிடிப்பு போயிருக்கும். அங்கு பெரிய வரவேற்பு கொடுத்து சாப்பாடு போட்டார்கள். அந்த இடத்தில் மிகவும் நெகிழ்ந்துவிட்டேன். எனக்கே இன்னும் திரையுலகில் மரியாதை கிடைக்கவில்லை, அதற்குள் இவ்வளவு மரியாதையா என வியந்தேன் என்றார் விஜய் சேதுபதி.