Don't Miss!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டனாக மாபெரும் சாதனை.. தோனியின் ரெக்கார்டை உடைத்து எறிந்த ருதுராஜ்
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
"காக்கி"யை கையில் எடுக்கும் விஜய் சேதுபதி...!
சென்னை: 2010 ம் ஆண்டு சீனு ராமசாமியின் இயக்கத்தில் தென்மேற்குப் பருவகாற்று திரைப்படத்தில், நாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி இன்று தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார்.
சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், புறம்போக்கு என்கின்ற பொதுவுடைமை போன்ற படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்த விஜய் சேதுபதி தொடர்ந்து நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியாகிய ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்தில் 55 வயது முதியவராக நடித்து அசத்திய விஜய் சேதுபதி, அடுத்ததாக போலீஸ் வேடத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்த மாகியிருக்கிறார்.
பண்ணையாரும் பத்மினியும் அருண்குமார் இயக்கத்தில் ஒரு வலுவான காவல்துறை அதிகாரியாக இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி, படத்திற்கு காசேதுபதி எனப் பெயரிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காக்க காக்க படத்தில் சூர்யா நடித்தது போன்ற ஒரு வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.