Don't Miss!
- News பாஜக கேம்பில் தொற்றிய பதற்றம்.. குழப்பம்.. அப்படி என்னதான் நடந்தது? புயலை கிளப்பிய உளவு ரிப்போர்ட்?
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சமூக வலைத் தளங்களில் விஷமத்தனம்: ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை!
சமூக வலைத் தளங்களில் விஷமத்தனமாக செய்தி பரப்புவது, பிற நடிகர்களின் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபடுவது போன்றவற்றை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தன் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமூக வலைத் தளங்களில் விஜய், அஜித் ரசிகர்கள் அடிக்கடி கருத்து மோதலில் ஈடுபடுவது வழக்கம்.
அதேபோல அஜீத் படம் வெளியாகும் போது விஜய் ரசிகர்கள் தவறான கருத்துக்களைப் பரப்புவதும், விஜய் படம் வெளியாகும்போது அஜீத் ரசிகர்கள் ஓவராகக் கலாய்ப்பதும் வழக்கமாகிவிட்டது.
சில இடங்களில் ரசிகர்களின் இந்த செயலால் வன்முறை மோதல் ஏற்பட்டுள்ளது. கத்தியால் குத்திக் கொன்ற சம்பவங்களும் நடந்தன.
சமீப காலமாக இவர்களுடைய இந்த மோதல் எல்லை மீறிக் கொண்டே போகிறது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் ட்விட்டரில் விஜய்யிடம் தெரிவித்து, ரசிகர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதை ஏற்ற விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில், "ரசிகர்களே சண்டையை நிறுத்துங்கள்.
இது போன்ற வீணான விஷயங்களில் நேரத்தை வீணாக்கி கொள்ள வேண்டாம். நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இனியும் சண்டை போடுவது தொடர்ந்தால் என்னுடைய ட்விட்டர் கணக்கை அழித்துவிடுவேன்," என்று எச்சரித்துள்ளார்.