Don't Miss!
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'ஊமைப் படம்': விக்ரம் ரசிகர்கள் ரகளை!
சென்னை அசோக் நகரில் உள்ள உதயம் திரையரங்க வளாகத்தில், விக்ரம், திரிஷா நடித்துள்ள பீமா படம் திரையிடப்பட்டுள்ளது. நேற்று இரவு காட்சிக்கு கூட்டம் அலை மோதியது. விக்ரமின் ரசிகர்களுடன், திரிஷாவின் ரசிகர்கள், ரசிகைகளும் பெருமளவில் படம் பார்க்க திரண்டிருந்தனர்.
படம் ஓடத்தொடங்கிய சிறிது நேரத்தில் படம் ஊமைப் படமாக மாறியது. வசனமோ, பின்னணி இசையோ கேட்கவில்லை. சுமார் அரை மணி நேரம் படம் இப்படியே ஓடியதால் எரிச்சலடைந்த ரசிகர்கள் கூச்சலிட்டனர்.
இதையடுத்து குழப்பமடைந்த ரசிகர்கள், ஆப்பரேட்டர் அறையைப் பார்த்து சத்தம் போட்டனர். அப்படியும் குறை சரி செய்யப்படாமல் தொடர்ந்து படம் ஓடியது. இப்படியாக சுமார் அரை மணி நேரம் படம் ஓடி விட்டது.
கடுப்பான ரசிகர்கள் ரகளையில் இறங்கினர். இருக்கைகளை உடைத்து கலாட்டாவில் குதித்தனர்.
அவர்களை தியேட்டர் ஊழியர்கள் அமைதிப்படுத்த முயன்றபோது அடிதடி ஏற்படும் சூழல் உருவானது.
இதையடுத்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
குமரன் நகர் போலீசார் விரைந்து வந்து ரசிகர்களை அமைதிப்படுத்தினர். ஓவர் ஆட்டம் போட்டவர்களை தியேட்டரை விட்டு வெளியேற்றினர்.
இதையடுத்து படம் நிறுத்தப்பட்டது. பின்னர் சவுண்ட் என்ஜீனியர்கள் வரவழைக்கப்பட்டு தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது. அதற்குள் 1 மணி நேரம் ஓடிவிட்டது.
அதன் பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு மீண்டும் படம் ஆரம்பத்திலிருந்து ஓட்டப்பட்டது.
ஆனால் பெரும்பாலான பெண்கள் தியேட்டரை வெளியேறி விட்டதால், ஆண்கள் மட்டும் படத்தைப் பார்த்து ரசித்தனர்.