Don't Miss!
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையாது இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கோடம்பாக்கத்தை பரபரக்க வைத்த விஷாலின் நற்பணிகள்!
கடந்த ஓராண்டு காலமாகவே விஷால் செய்யும் நற்பணிகள் பலரையும் ஆச்சர்யப்படுத்தி வருகின்றன. இவர் என்ன நோக்கத்தில் இந்த உதவிகளையெல்லாம் செய்கிறார் என்று கேட்க வைத்துள்ளன.
இவற்றுக்கு விஷால் தரும் ஒரே பதில்: "நிச்சயம் அரசியல் இல்லை... ஏழைகளுக்கு உதவ வேண்டும், ஏழைக் குழந்தைகள் நன்கு படித்து நல்ல எதிர்காலத்தை அடைய வேண்டும் என்பதே!"
இன்று விஷாலுக்குப் பிறந்த நாள். இந்த நாளில் வழக்கமாக நண்பர்களுடன் நட்சத்திர ஓட்டல்கள் அல்லது பண்ணை இல்லத்தில் விருந்துண்டு கொண்டாடும் பழக்கத்தை இன்று முதல் விட்டொழித்து விட்டதாக அறிவித்துவிட்டார் விஷால்.
அடுத்து, இன்று காலை இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் அவர்களுடன் தங்கி, உதவி அளித்து, உணவு பரிமாறினார்.
அடுத்து திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனை மற்றும் கோடம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு விஷால் தங்க மோதிரங்களைப் பரிசாக அளித்தார். இந்தக் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களையும் பரிசாக அளித்தார்.
அடுத்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஏழை, எளியவர்கள், ஆதரவற்ற பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் மாணவ - மாணவிகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார். பாரிமுனையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஒரு பெண் குழந்தைக்கு தேவி என்று தன் தாயார் பெயரை விஷால் சூட்டினார்.
போகும் இடங்களிலெல்லாம் விஷாலை வரவேற்று பெண்கள் ஆரத்தி எடுத்தனர்.