Don't Miss!
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- News ஹலோ எங்க வீட்ல மொத்தம் 5 ஓட்டு.. சார் நான் ஈபி ரீடிங் எடுக்க வந்திருக்கேன்!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தமிழர்கள் சோம்பேறிகள், டாஸ்மாக் முன்பு நிற்பவர்களா?: விஷாலை மிரட்டியவர்கள் மீது புகார்
சென்னை: தமிழர்களை அவதூறாக பேசியதாக இணையதளம் ஒன்றில் வெளியான செய்தியை பார்த்து தனக்கு போன் செய்து திட்டியவர்கள் மீது நடிகர் விஷால் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தமிழர்கள் சோம்பேறிகள், அவர்கள் டாஸ்மாக் கடைகள் முன்பு தான் லைன் கட்டி நிற்பார்கள் என்று நடிகர் விஷால் தெரிவித்ததாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதை பார்த்த சிலர் விஷாலுக்கு போன் செய்து திட்டியுள்ளனர், மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து விஷால் தரப்பில் நடிகர் ஹரிகிருஷ்ணன் சென்னை போலீசில் மிரட்டல் போன் பற்றி புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது,
விஷால் தமிழர்களை அவதூறாக பேசவில்லை. அவர் அவதூறாக பேசியதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. விஷால் தமிழர்களை உயர்வாக கருதுபவர்.
மூன்று எண்களில் இருந்து விஷாலுக்கு போன் வந்தது. அவர்கள் விஷாலை திட்டியதுடன் மிரட்டினர். அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விஷாலின் பெயரை கெடுக்கவே இப்படியொரு போலி செய்தி வெளியாகியுள்ளது. வதந்தி பரப்பியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.