Don't Miss!
- News கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்
- Education தமிழக கல்லூரி மாணவர் பதிவு விண்ணப்ப சாளரத்தில் மாற்றம்...!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
திமுக மீது நம்பிக்கை உள்ளது...அதிமுக.,விற்கு எதிராவனில்லை...உஷாராக பேட்டி கொடுத்த விஷால்
சென்னை : தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றும் என நம்புவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். தனது பிறந்த நாளை முன்னிட்டு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் இன்று தனது 44 வது பிறந்தநாளை கொண்டாடினார். தனது 44வது பிறந்த நாளையொட்டி கீழ்பாக்கத்தில் உள்ள மெர்சி ஆசிரமத்தில் கேக் வெட்டி, அங்குள்ளவர்களுடன் பிறந்தநாளை கொண்டாடினார். அங்குள்ள ஆதரவற்ற 150 முதியோருக்கு சிக்கன் பிரியாணி உணவு, சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற காப்பகத்தில் 14 குழந்தைகள் உட்பட 38 பேருக்கு பிரியாணி வழங்கி விட்டு அவருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார் விஷால்.
பின்னர் செய்தியாளர்களை சந்திக்கையில், புனிதமான இடம் என்பதால் பிறந்த நாளன்று இங்கு வந்துள்ளதாகவும், பிறந்த நாளன்று நிறைய நல்ல விஷயங்கள் நடப்பதால் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறிய விஷால் தெரிவித்தார்.
இம்சை அரசன் 24 ம் புலிகாசி பட விவகாரத்தில் ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் நடிக்க வருவதை வரவேற்பதாகவும், நீண்ட தொய்வு ஏற்பட்டது, அவர் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என கூறினார்.
எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினால் சினிமா துறைக்கு நல்லது நடக்கும் என நம்புவதாகவும், நடிகர் சங்க வழக்கு நிலுவையில் இருப்பதால் கொரோனா காலத்தில் உயிரிழந்த நாடக நடிகர்களுக்கு உதவ முடியவில்லை எனவும் விஷால் கூறினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் நன்றாக ஆட்சி செய்வார் என்பதால் தான் மக்கள் அவரை தேர்ந்தெடுத்ததாகவும், மேலும் சிறப்பாக அவர் செயல்படுவார் என நம்புவதாகவும் அவர் கூறினார். ஹைதராபாத்தில் கூட ஸ்டாலின் ஆட்சி குறித்து பேசுவதாக கூறினார் விஷால்.
திமுகவிற்கு ஆதரவாக பேசுவதால் தாம் அதிமுகவிற்கு எதிரானவன் என நினைக்க வேண்டாம் எனவும் மிக கவனமாக விஷால் தெரிவித்தார்.
விஜய் டிவி.,யின் பிரபல ஷோவில் களமிறங்கும் 4 தலைவிகள்... குஷியில் ரசிகர்கள்
விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் 31 படத்தின் டைட்டில் மற்றும் ஃபஸ்ட்லுக் வெளியிடப்பட்டது. வீரமே வாகை சூடும் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த படமும் இன்று பூஜையுடன் துவங்கப்பட்டது.
இதற்கு முன் விஷால் நடித்த எனிமி, துப்பறிவாளன் 2 போன்ற படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. எனிமி படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர்.
-
சிம்பிளாக நடந்து முடிந்த விவேக் மகள் திருமணம்.. கல்யாணத்தில் நடந்த செம விஷயம் என்ன தெரியுமா?
-
Aadujeevitham Review: ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனத்தில் அடிமை வாழ்க்கை.. கண்ணெல்லாம் கலங்குது!
-
சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்