Don't Miss!
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மீண்டும் ஆர்யா-விஷ்ணு கூட்டணி
பில்லாவை வெற்றிகரமாக முடித்துள்ள விஷ்ணுவர்த்தன் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். இப்படத்திற்கு சர்வம் என பெயரிட்டுள்ளார். முதலில் இதில் ஆர்யா நடிப்பதாக முடிவானது. பின்னர் நான் கடவுள் படத்தில் ஆர்யா பிசியாக இருந்த காரணத்தால், ஆர்யாவை விட்டு விட்டு சூர்யாவிடம் போனார் விஷ்ணு. பின்னர் அவரும் டிராப் ஆகி, அர்ஜூன் என முடிவானது.
இப்போது அதுவும் டிராப் ஆகி மீண்டும் ஆர்யாவே ஹீரோவாக்கப்பட்டுள்ளார். இதை முறைப்படி அவர் அறிவித்துள்ளார்.
அடுத்த படம் குறித்து விஷ்ணுவர்த்தன் கூறுகையில், பில்லா பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆகியுள்ளது சந்தோஷம் தருகிறது. அஜீத்துக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களுக்கும், அவர்கள் கொடுத்த ஆதரவுக்காக நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.
எனது அடுத்த படமான சர்வம் தொடர்பான விவாதங்கள் கிட்டத்தட்ட முடிந்து விட்டன. முதலில் சூர்யாவை முடிவு செய்திருந்தேன். இப்போது எனது விருப்ப நாயகனான ஆர்யாவே நடிக்கவுள்ளார்.
பில்லாவைத் தொடர்ந்து ஐங்கரன் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது. பில்லா படத்தில் ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா, ரோபோட் படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளால், புதிய ஒளிப்பதிவாளரை ஒப்பந்தம் செய்யவுள்ளேன் என்றார்.
இதற்கிடையே, பிரபுவின் சிவாஜி பிலிம்ஸ், அஜீத்தை வைத்து தயாரிக்கவுள்ள படத்தையும் விஷ்ணுவர்த்தனே இயக்கக் கூடும் எனத் தெரிகிறது. முதலில் கெளதம் மேனன் இயக்குவார் என பேச்சு நிலவியது குறிப்பிடத்தக்கது.