அடகு வைத்த வீட்டை தனியாரிடம் இருந்து மீட்டு வங்கியில் வைத்த கமல்

By Siva

Kamal
சென்னை: விஸ்வரூபம் படத்திற்காக தனியாரிடம் அடகு வைத்த வீட்டை மீட்டார் கமல் ஹாசன்.

கமல் ஹாசன் ரூ. 90 கோடி செலவில் விஸ்வரூபம் படத்தை எடுத்தார். பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய மாநில அரசு தடை விதித்தது. அப்போது கமல் கூறுகையில், விஸ்வரூபம் படத்தை எடுக்க எனது வீடு உள்ளிட்டவற்றை அடகு வைத்துள்ளேன். படம் ரிலீஸாகவில்லை என்றால் வீடு என் கையைவிட்டுப் போய்விடும் என்றார். இதை கேட்டு அவரது ரசிகர்கள் பலர் அவருக்கு காசோலைகளை அனுப்பி வைத்தனர்.

ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்து ஒரு வழியாக படம் ரிலீஸ் ஆனது. படம் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது. இதையடுத்து அடகு வைத்த வீட்டை அவர் மீட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

விஸ்வரூபம் படத்தை எடுக்க தனியாரிடம் அடகு வைத்த என் வீட்டை மீட்டு இப்போது அதை தேசிய வங்கியில் அடகு வைத்துள்ளேன். விரைவில் அதை மீட்டுவிடுவேன். விஸ்வரூபம் நல்ல வசூல் செய்துள்ளது. அந்த வருமானம் இனிமேல் தான் எனக்கு கிடைக்கும். இந்த படம் மூலம் நான் பாடம் கற்றுக் கொண்டுள்ளேன். சொல்லப் போனால் ஒவ்வொரு படத்திலும் பாடம் கற்றுள்ளேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X