'எனக்கு மட்டும் ஆயுள்': காளையாக மாறி கவிபாடிய விருமாண்டி
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகி வரும் நேரத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்பு காளை மாடுகள் குறித்து உலக நாயகன் எழுதிய கவிதை சமூக வலைதளங்களில் மீண்டும் உலா வருகிறது.
ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தடையை மீறி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் பேரணியும் நடந்துள்ளது, நடந்து வருகிறது.

ஜல்லிக்கட்டு என்று கூறாதீர்கள் ஏறு தழுவுதல் என்று கூறுங்கள் என உலக நாயகன் கமல் ஹாஸன் இந்தியா டுடே மாநாட்டில் தெரிவித்தார். காளைகளை யாரும் துன்புறுத்துவது இல்லை மாறாக அதன் மீது பாசம் வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஏறு தழுவுதலுக்கு ஆதரவாக ட்விட்டரிலும் குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு காளை மாடுகள் பற்றி கமல் எழுதிய கவிதை தற்போது சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
அந்த கவிதை இதோ,


Click it and Unblock the Notifications











