Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ராங் நம்பர்: சிவகார்த்திகேயன் போன் செய்தால் இணைப்பை துண்டித்த இயக்குனர்கள்
சென்னை: சினிமாவில் வாய்ப்பு கேட்டு சிவகார்த்திகேயன் போன் செய்தபோது இயக்குனர்கள் ராங் நம்பர் என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்களாம்.
போலீஸ் அதிகாரியின் மகனான சிவகார்த்திகேயன் நன்றாக படித்துள்ளார். ஆனால் படிப்பிற்கு ஏற்ற வேலைக்கு செல்லாமல் சினிமாவுக்கு வந்துவிட்டார். முதலில் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்து பின்னர் பெரிய திரைக்கு வந்தார்.
இந்நிலையில் இது குறித்து சிவா கூறுகையில்,
டிவி
படிக்கும் காலத்தில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆக வேண்டும் என விரும்பினேன். அதன் பிறகு விருது விழாவை தொகுத்து வழங்க ஆசைப்பட்டேன்.
படம்
விருது விழாவை தொகுத்து வழங்கினால் அங்கு வரும் திரையுலகினர் என்னை பார்த்துவிட்டு படங்களில் நடிக்க வாய்ப்பு தருவார்கள் என நினைத்தேன்.
காமெடி நடிகர்
சினிமாவுக்கு வந்தாலும் நகைச்சுவை நடிகராக ஆக வேண்டும் என நினைத்தேன். அல்லது ரஜினி, அஜீத், விஜய்யின் தம்பியாக நடிக்க விரும்பினேன்.
இயக்குனர்கள்
படங்களில் நடிக்க ஆசைப்பட்டு இயக்குனர்களுக்கு போன் செய்தால் ராங் நம்பர் என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டனர். இருப்பினும் நான் முயற்சியை கைவிடவில்லை.
நண்பர்கள்
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆசைப்பட்டு வாழ்க்கையை வீணடிக்காதே என நண்பர்கள் என்னை எச்சரித்தனர். அதற்கு நான், நீங்கள் வாழ்க்கை நடத்த அடுத்தவர்களின் பிராண்டுகளை விற்கும்போது நான் விற்கும் ஒரே பிராண்ட் நான் தான் என பன்ச் வசனம் பேசினேன்.