Don't Miss!
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- News ஹலோ எங்க வீட்ல மொத்தம் 5 ஓட்டு.. சார் நான் ஈபி ரீடிங் எடுக்க வந்திருக்கேன்!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரஜினியை தலையில் வைத்துக் கொண்டாடும் ஷாருக்கான் இவ்ளோ நல்லவரா?
மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இவ்வளவு நல்லவராக இருக்கிறாரே என்று ரசிகர்கள் பேசும்படி அமைந்துள்ளது அவர் அண்மையில் கூறிய விஷயம்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது ஷாருக்கான் கூறிய ஒரு விஷயம் பற்றியே பலரும் தற்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான் கூறியதாவது,
லண்டன்
20 ஆண்டுகளுக்கு முன்பு நான் லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்தேன். விமானம் வந்ததும் அதில் ஏறச் சென்றபோது ரசிகை ஒருவர் என் பின்னால் ஓடி வந்தார்.
அக்ஷய் குமார்
என் பின்னால் ஓடி வந்த ரசிகை என்னை நிறுத்தி நீங்கள் நடிகர் அக்ஷய் குமார் தானே. நான் உங்களின் தீவிர ரசிகை சார் என்று மகிழ்ச்சி பொங்க கூறினார். அவரிடம் நான் அக்கி அல்ல ஷாருக்கான் என்று கூற விரும்பவில்லை.
ஆட்டோகிராப்
என்னை பிடிக்கும் என்றால் உங்களுக்கு 'து சீஸ் படி ஹை மஸ்த்' பாடலும் மிகவும் பிடித்திருக்க வேண்டுமே என்று கேட்டேன். அவரும் ஆமாம் என்றார். பின்னர் அவருக்கு அன்புடன் அக்ஷய் குமார் என்று ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தேன் என்றார் ஷாருக்கான்.
ஷாருக்கான்
மகிழ்ச்சியுடன் வந்த ரசிகையின் மனம் நோகாமல் இருக்க தான் யார் என்பதை மறைத்து அக்ஷய் குமார் போன்று பேசி ஆட்டோகிராப் போட்டுள்ளார் ஷாருக்.