Don't Miss!
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வெட்கி தலை குனிகிறேன்: கமல் ஹாஸனிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆமீர் கான்
மும்பை: விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்தபோது கமல் ஹாஸனுக்கு ஆதரவாக நிற்காததற்கு பாலிவுட் நடிகர் ஆமீர் கான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
சென்சார் போர்டு படங்களில் பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவற்றை நீக்குமாறு கூறுவதற்கு பாலிவுட் நடிகர் ஆமீர் கான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாலிவுட் படங்கள் பல சென்சார் போர்டில் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து ஆமீர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தடை
படத்தில் எது தொடர்பாகவும் தடை விதிப்பதற்கு நான் எதிரானவன். மோசமான வார்த்தைகள் என்று தங்களிடம் எந்தவித பட்டியலும் இல்லை என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் எங்களிடம் தெரிவித்துள்ளார்.
வார்த்தைகள்
படத்தில் வரும் சில வார்த்தைகள், காட்சிகள் சரியில்லை என்று கூறி அதற்கு தடை விதிப்பது நியாயம் அல்ல.
கமல் ஹாஸன்
திரைத்துறையினர் ஒன்றாக சேர்ந்து போராட வேண்டிய நேரத்தில் நான் என் பட வேலையில் பிசியாக இருந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன். கமல் சார், விஸ்வரூபம் பிரச்சனை நேரத்தில் நான் உங்களுடன் இல்லாமல் போனதற்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஒரு படத்திற்கு தடை விதிப்பது சரி அல்ல.
மாநில அரசு
சென்சார் போர்டு சான்றிதழ் அளித்த பிறகு அந்த படத்தை மக்கள் அச்சமின்றி கண்டுகளிக்க மாநில அரசு தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சான்றிதழ் அளிக்கப்பட்ட பிறகு ஒரு படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் செய்வது சரி அல்ல என்று ஆமீப் தெரிவித்துள்ளார்.