'ஓ காதல் கண்மணி' படம் ரிலீஸாவதை நினைத்து கவலையாக உள்ளது: துல்கர் சல்மான்
சென்னை: ஓ காதல் கண்மணி படம் ரிலீஸாவதை நினைத்து கவலையாக இருப்பதாக படத்தின் ஹீரோ துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ள காதல் படம் ஓ காதல் கண்மணி. படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படக்குழுவினர் சனிக்கிழமை சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

அப்போது துல்கர் சல்மான் கூறுகையில்,
இது என் கனவுப் படம். ஓ காதல் கண்மணி படத்தில் நடித்த ஓராண்டும் கனவு போன்று இருந்தது. அந்த கனவில் இருந்து கண் விழிக்கவே கூடாது என்று தோன்றியது. தொடர்ந்து அதே கனவில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். பி.சி.ஸ்ரீராம், மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். ரஹ்மானுடன் பணியாற்றியது மேஜிக் போன்று இருந்தது. இது கனவுக் குழு.
என் கனவில் இருந்து விழித்துக் கொள்ள வேண்டும் என்பதால் படம் ரிலீஸாவதை நினைத்து கவலையாக உள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications











