Don't Miss!
- Finance பிரியாணி கடையில் வருமான வரித்துறை ரெய்டு.. அட பெங்களூர் மேக்னா புட்ஸ்-ப்பா..!!
- Sports மும்பை அணியில் சூர்யகுமார் இல்லை? சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவால் ரசிகர்கள் சோகம்.. என்ன நடந்தது?
- News ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் ஜாமீன் வந்த நடிகர் ரூசோ தலைமறைவு.. தீவிரமாக தேடும் தனிப்படை
- Technology மார்ச் 22 உறுதி.. 50எம்பி கேமரா.. 5000எம்ஏஎச் பேட்டரி.. வருகிறது அசத்தலான போன்.. எந்த மாடல்?
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
செய்வீங்களா ரசிகர்களே, அஜித் சொன்ன 6 விஷயத்தை செய்வீங்களா? #வாழுவாழவிடு
சென்னை: அஜித் படத்தில் ஒன்று நிஜத்தில் ஒன்று எல்லாம் பேசவில்லை. இரண்டிலும் வாழு வாழ விடு என்று தான் கூறுகிறார்.
தமிழகத்தில் தாமரை மலர அஜித் ரசிகர்கள் உதவ வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். இதையடுத்து தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை என்று தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார் அஜித்.
அஜித்தின் அறிக்கையை பார்த்த ரசிகர்கள் பாஜகவுக்கு ஒரு போதும் ஆதரவு அளிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
அஜித்
தனது அறிக்கையில் வாழு வாழ விடு என்று அஜித் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் தங்கள் குடும்பத்தை சிறப்பாக பார்த்துக் கொண்டு நன்றாக வாழ வேண்டும் என்றே விரும்புகிறார் அவர்.
|
தெளிவு
அரசியல் விஷயத்தில் அஜித் எப்பொழுதுமே தெளிவாகத் தான் உள்ளார். 2007ம் ஆண்டு அவர் அளித்த பேட்டியே அதற்கு சிறந்த உதாரணம்.
உன் குடும்பம்
உங்கள் வாழ்க்கையை பார்த்துக் கொள்ளுங்கள், குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள். வாழுங்கள் அதே சமயம் அடுத்தவர்களையும் வாழ விடுங்கள் என்று தான் அஜித் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இதனாலேயே #வாழுவாழவிடு என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.
கொண்டாடும்
எனது ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் மாணவர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதும், தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்களது கடமையை செவ்வனே செய்வதும், சட்டம்-ஒழுங்கை மதித்து நடந்துகொள்வதும், ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பதும், வேற்றுமை களைந்து ஒற்றுமையுடன் இருப்பதும், மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்துவதும் ஆகியவை தான். அதுவே நீங்கள் எனக்கு செய்யும் அன்பு என்று அஜித் தெரிவித்துள்ளார். அஜித் சொன்னபடி நடந்தால் ஊர், உலகமே உங்களை கொண்டாடும். அவர் நம்மால் முடியாததை செய்யச் சொல்லவில்லை. அவருக்காக வாழுமாறும் கூறவில்லை.