பில்டிங் கட்றோம், கட்சி ஆரம்பிக்கிறோம், அடுத்த தேர்தலில் ஜெயிக்கிறோம்: நடிகர் ஆர்யா
சென்னை: நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டி முடித்துவிட்டு புதிய கட்சி துவங்கி அடுத்த தேர்தலில் ஜெயிக்கிறோம் என்று நடிகர் ஆர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு துவங்கியதும் முதல் ஆளாக நடிகர் அஜீத் தனது மனைவியுடன் வாக்களித்தார். அதன் பிறகு ரஜினி, கமல், வைரமுத்து, ஆர்யா, விஷால், த்ரிஷா, விவேக் என்று திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர்.

விஷால் தனது நண்பன் ஆர்யாவுடன் சென்று வாக்களித்துள்ளார். வாக்களித்த பிறகு விஷால் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
தற்போது தான் நானும், ஆர்யாவும் வாக்களித்தோம். தயவு செய்து நீங்களும் வாக்களியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
விஷாலின் ட்வீட்டை பார்த்த ஆர்யா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
தலைவா...பில்டிங் கட்றோம் அப்புறம் கட்சி ஆரம்பிக்கிறோம் அடுத்த தேர்தலில் ஜெயிக்கிறோம்.... புரட்சி தளபதி என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











