Don't Miss!
- News "பேசுவதை எல்லாம் ஒட்டு கேக்குறாங்க.. இதனால நான் செல்போனை யூஸ் பண்றதே இல்லை.." ஹெச்.ராஜா பகீர் புகார்
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அசினுக்கு கறுப்புக் கொடி... 4 பேர் கைது!
கோவை அருகே விஜய்யுடன் காவலன் படப்பிடிப்பில் அவர் பங்கேற்ற போது இந்த போராட்டம் நடந்தது.
ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி சிங்கள ராணுவம் கொன்று குவித்ததைக் கண்டிக்கும் வகையில் தமிழ் நட்சத்திரங்கள் யாரும் இலங்கைக்கு செல்லக்கூடாது என்று தமிழ்த் திரைப்பட நடிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்திருந்தன.
ஆனால் தடையை மீறி நடிகை அசின் இலங்கை சென்றுவந்தார். அவருக்கு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் திடீரென்று ஆதரவு தெரிவித்ததால், தடையை மீறியதற்காக அவர் இதுவரை மன்னிப்பு கேட்கவும் இல்லை.
ஆனால் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் அசினுக்கு கடும் எதிர்ப்பு நிலவியது. இந்த எதிர்ப்பினால் அவர் இனி தமிழகம் வரமுடியாது என்ற நிலை இருந்தது.
ஆனால் இதற்கெல்லாம் அசின் கவலைப்பட்டவராகத் தெரியவில்லை. தனது செயலை நியாயப்படுத்தியதுடன், விஜய்யுடன் காவலன் படத்தில் நடிப்பதற்காக சென்னை வந்தார், பலத்து பாதுகாப்புடன். எந்த எதிர்ப்பும் இல்லை.
அதன்பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டார். இலங்கை சென்றது குறித்த கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்ல மறுத்தார்.
இந்நிலையில் காவலன் படத்தின் படப்பிடிப்பு கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் நடந்து வருகிறது. நடிகர் விஜய்-அசின் நடிக்கும் இப்படத்தில் வடிவேல் உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள்.
நேற்று நடிகர் விஜய்-அசின் நடித்த காட்சிகள் மேட்டுப் பாளையத்தில் படமாக்கப்பட்டது. ரயில் நிலையத்தில் இந்த படப்பிடிப்பு நடந்தது. விஜயை காண ரசிகர்கள் முண்டியடித்தனர். அவர்களைப் பார்த்து கும்பிட்டபடி விஜய் வந்தார்.
படப்பிடிப்பில் கலந்து கொள்ள அசின் மேட்டுப்பாளையம் வந்தார். நடிகர் வடிவேலு வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த படப்பிடிப்பு 5 நாட்கள் மேட்டுப்பாளையம் பகுதியில் நடக்கிறது.
அசின் படப்பிடிப்பில் இருந்தபோது அவருக்கு எதிராக திடீரென்று கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது. 'அசின் இனி தமிழ்ப்படங்களில் நடிக்கக்கூடாது' என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.
உடனடியாக போலீசார் வந்து கறுப்புக் கொடி காட்டியவர்களில் 4 பேரைக் கைது செய்தனர்.