Don't Miss!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
படம் மட்டும் வந்துச்சு... போலி சாமியாராக நடிக்கும் ஷகிலாவுக்கு போனில் மிரட்டல்!
ஆசாமி என்ற படத்தில் கவர்ச்சி நடிகை ஷகிலா போலி சாமியாராக நடிக்கிறார். போலி சாமியார்கள் பிடியில் இருந்து பொது மக்களை எப்படி காப்பாற்றுவது என்பது தான் கதை. அதி்ல் கவர்ச்சி நடிகை ஷகிலா, சந்தான பாரதி, பாண்டு, அனுமோகன், நெல்லை சிவா ஆகியோர் போலி சாமியார்களாக நடிக்கின்றனர்.
இந்த 5 பேரும் சேர்ந்து ஒரு ஆசிரமத்திற்குள் அரசியல் வாதியால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரூ. 100 கோடி பணத்தை அபேஸ் பண்ணுவது போன்று கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை இயக்குகிறார் ஆண்டாள் ரமேஷ்.
ஷகிலா போலி சாமியாராக நடிப்பது தெரிந்து யாரோ சிலர் அவருக்கு போனில் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இது குறித்து ஷகிலா கூறியதாவது,
கடந்த 4 நாட்களாக என் வீட்டு போன் மேல் போன் வருகிறது. எடுத்துப் பேசினால் யாரோ அசிங்கமாகப் பேசுவதோடு என்னை மிரட்டுகின்றனர். ஒருவன் என்னைக் கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டு போலி சாமியாராகவா நடிக்கிறாய், நடித்துவிட்டு வெளியே வந்துவிடுவாயா? படம் மட்டும் ரிலீஸானால் நீ வெளியே நடமாட முடியாது என்கிறான்.
நான் ஒரு நடிகை. எந்த வேடம் கொடுத்தாலும் நடிப்பேன். அந்த வேடத்தில் நடிக்கக்கூடாது, இந்த வேடத்தில் நடிக்கக்கூடாது என்று சொல்ல நீ யார்? தில் இருந்தால் நேரில் வா பார்க்கலாம் என்றவுடன் போனை வைத்துவிட்டான்.
இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்படுபவள் நான் இல்லை என்றார்.