Don't Miss!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- News ராகுல் முதல் டிகே சிவக்குமார் தம்பி வரை.. 2ம் கட்ட தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் இவர்கள் தான்!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ரசிகர்களிடம் 'கசங்கிய' ஹன்சிகா!
சமீபத்தில் வெளியான பீப்ளி இந்திப் படத்தைப் பார்க்க சென்னையில் உள்ள அந்த பிரபல மாலுக்கு சென்றுள்ளார் ஹன்சிகா.
நம்மை யாருக்குத் தெரியப் போகிறது என்ற நினைப்பில் ரொம்ப கேஷுவலாக, அந்த மாலில் நுழைந்து கடைகளைப் பராக்குப் பார்த்தபடியே சென்றுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் திமுதிமுவென்று இளைஞர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டார்களாம்.
என்ன செய்வதென்று யோசிப்பதற்குள், ஆர்வ மிகுதியால் அவரை அங்கே இங்கே தொட்டுத் தடவி படுத்திவிட்டார்களாம். சில ரசிகர்கள் அவர் கையைப் பிடித்திழுத்து தங்களுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்களாம். இன்னும் சிலர் இடுப்பில் கிள்ள, நிலைமை எக்கச்சக்கமாவதை உணர்ந்த ஹன்சிகா தப்பித்தால் போதுமென்று எஸ்கலேட்டருக்கு தாவ, அங்கேயும் விடாமல் துரத்தியுள்ளனர் ரசிகர்கள்.
"நான் நடித்து ஒரு படம் கூட வெளியாகவில்லை. அதற்குள் எனக்கு இவ்ளோ ரசிகர்களா... தமிழ் ரசிகர்கள் அன்பு திக்குமுக்காட வைக்கிறது" என்றார் ஹன்ஸிகா.
'தமிழ் ரசிகர்களுக்கு வேறு வேலைவெடடி ஏது' என்ற உண்மையை இத்தனை சீக்கிரம் புரிந்து கொண்டுவிட்டார் போலிருக்கிறது!