'சோக்காலி'க்காக திரும்பி வந்தார் சோனா!

By Sudha

சோக்காலி என்ற படத்தில் நடிப்பதற்காக மீண்டும் சென்னை திரும்பியுள்ளார் கவர்ச்சி நடிகை சோனா.

நடிகை சோனாவுக்கும், பின்னணிப் பாடகர் எஸ்.பி.சரணுக்கும் இடையே சமீபத்தில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டது. போலீஸ் வரை போனார் சோனா. சரண் தரப்பில் சமரசம் பேசியதாக தெரிகிறது. பின்னர் சோனாவிடம் சரண் தரப்பு மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து புகாரை திரும்பப் பெறுவதாக கூறினார் சோனா. மேலும் தற்காலிகமாக நடிப்புக்கு முழுக்குப் போடுவதாகவும் கூறி வெளிநாட்டுக்குப் போய் விட்டார்.

கடைசி வரை சோனா -சரண் விஷயத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பது கடைசி வரை யாருக்குமே தெரியவில்லை. இந்த நிலையில் மறுபடியும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார் சோனா. சோக்காலி என்ற படத்தில் நடிக்கிறாராம். இதில் அவருக்கு முக்கிய வேடமாம்.

இதுகுறித்து சோனா கூறுகையில், இந்த மாதம் ஷூட்டிங்கைத் தொடங்குகிறார்கள். முக்கிய வேடத்தில் நான் நடிக்கிறேன். வில்லத்தனமாகவும், நல்லதனமாகவும் இதில் நான் வித்தியாசமாக நடிக்கிறேன். இது கிட்டத்தட்ட எனது நிஜ கேரக்டர் மாதிரியே இருப்பதால் ஈடுபாட்டுடன் நடிக்கிறேன் என்றார் சோனா.

அப்புறம், படத்தில் சோனாவின் நிஜ வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமும் இடம் பெறப் போகிறதாம். அது என்ன என்று கேட்டால் சஸ்பென்ஸ் என்கிறார் சோனா.

சரி,சமீபத்திய சர்ச்சைகள் குறித்து என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கேட்டால், அதுகுறித்து நான் பேசவே விரும்பவில்லை. அதை மறக்கவே விரும்புகிறேன். யார் வாழ்க்கையையும் நான் கெடுக்கவில்லை என்றார் பொத்தாம் பொதுவாக.

அப்படியானால் வெங்கட்பிரபுவின் படத்தில் நடிப்பீர்களா என்று கேட்டபோது, இல்லை இல்லை, எனது முழு கவனமும் இப்போதைக்கு எனது யூனிக் ஸ்டோர் மீது மட்டுமே உள்ளது என்றார் அவசரம் அவசரமாக.

ஆமாமா, கடையையும் பார்த்துக்கணுமே வியாபாரமும் முக்கியமில்லையா... !

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X