Just In
- 2 min ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 29 min ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 2 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 2 hrs ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
Don't Miss!
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'சோக்காலி'க்காக திரும்பி வந்தார் சோனா!
சோக்காலி என்ற படத்தில் நடிப்பதற்காக மீண்டும் சென்னை திரும்பியுள்ளார் கவர்ச்சி நடிகை சோனா.
நடிகை சோனாவுக்கும், பின்னணிப் பாடகர் எஸ்.பி.சரணுக்கும் இடையே சமீபத்தில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டது. போலீஸ் வரை போனார் சோனா. சரண் தரப்பில் சமரசம் பேசியதாக தெரிகிறது. பின்னர் சோனாவிடம் சரண் தரப்பு மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து புகாரை திரும்பப் பெறுவதாக கூறினார் சோனா. மேலும் தற்காலிகமாக நடிப்புக்கு முழுக்குப் போடுவதாகவும் கூறி வெளிநாட்டுக்குப் போய் விட்டார்.
கடைசி வரை சோனா -சரண் விஷயத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பது கடைசி வரை யாருக்குமே தெரியவில்லை. இந்த நிலையில் மறுபடியும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார் சோனா. சோக்காலி என்ற படத்தில் நடிக்கிறாராம். இதில் அவருக்கு முக்கிய வேடமாம்.
இதுகுறித்து சோனா கூறுகையில், இந்த மாதம் ஷூட்டிங்கைத் தொடங்குகிறார்கள். முக்கிய வேடத்தில் நான் நடிக்கிறேன். வில்லத்தனமாகவும், நல்லதனமாகவும் இதில் நான் வித்தியாசமாக நடிக்கிறேன். இது கிட்டத்தட்ட எனது நிஜ கேரக்டர் மாதிரியே இருப்பதால் ஈடுபாட்டுடன் நடிக்கிறேன் என்றார் சோனா.
அப்புறம், படத்தில் சோனாவின் நிஜ வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமும் இடம் பெறப் போகிறதாம். அது என்ன என்று கேட்டால் சஸ்பென்ஸ் என்கிறார் சோனா.
சரி,சமீபத்திய சர்ச்சைகள் குறித்து என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கேட்டால், அதுகுறித்து நான் பேசவே விரும்பவில்லை. அதை மறக்கவே விரும்புகிறேன். யார் வாழ்க்கையையும் நான் கெடுக்கவில்லை என்றார் பொத்தாம் பொதுவாக.
அப்படியானால் வெங்கட்பிரபுவின் படத்தில் நடிப்பீர்களா என்று கேட்டபோது, இல்லை இல்லை, எனது முழு கவனமும் இப்போதைக்கு எனது யூனிக் ஸ்டோர் மீது மட்டுமே உள்ளது என்றார் அவசரம் அவசரமாக.
ஆமாமா, கடையையும் பார்த்துக்கணுமே வியாபாரமும் முக்கியமில்லையா... !