Don't Miss!
- Sports IPL 2024: ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான பவுலிங்.. ரிஷப் பண்ட் வைத்த ஆப்பு.. கதிகலங்கிய மோஹித்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Lifestyle Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஊழல் கவலை தருகிறது! - ஐஸ்வர்யா ராய்
என்டிடிவி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராய், தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
இதில் ஊழல் பற்றிய கேள்வியொன்றுக்கு இவ்வாறு கூறியுள்ளார்:
உலக அழகியாக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பல்வேறு பொது சேவைகளில் ஈடுபட்டு வந்துள்ளேன். சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்காகவும், பல்வேறு மருத்துவமனைகளுக்காகவும் நிதி வசூலித்துத் தந்துள்ளேன்.
ஊழல் இன்றைக்கு பெரும் பிரச்சினைதான். நாட்டில் ஊழல் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது. அதே நேரம் அதை அம்பலப்படுத்துவதில் பத்திரிகைகள் தீவிரம் காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
அமிதாப்பச்சன் குடும்பத்தை பற்றி பத்திரிகைகள் வெளியிடும் எல்லா செய்திகளுக்கும் நாங்கள் பதிலளிக்க வேணடிய தேவையில்லை. அவசியம் இருந்தால் மட்டும் பதிலளிப்போம். நாங்கள் சொல்வதை மக்கள் கவனிக்க வேண்டும்.
அரசியலில் சேருவது பற்றி நான் இப்போது யோசிக்கவில்லை. நாட்டுக்கு ஏதேனும் செய்ய வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை. நானும் என் கடமையைச் செய்து கொண்டுதான் இருக்கிறேன்," என்றார்.