Don't Miss!
- News யோசிக்கவேயில்லை.. அண்ணாமலை அப்பதான் விபூதி வெச்சாரு.. அதுக்குள்ள குபீர்னு ரூ.500.. நம்ம கோவையில்தான்
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ப்ரியங்கா சோப்ராவுக்கு 11 வீடுகள்!!
சமீபத்திய வருமான வரி சோதனையின்போது இதற்கான ஆதாரங்களைக் கைப்பற்றியுள்ளனர் அதிகாரிகள்.
முன்னணி இந்தி நடிகையான ப்ரியங்கா சோப்ரா மற்றும் கத்ரீனா கைப் ஆகியோர் வீடு, அலுவலகங்களில் சமீபத்தில் வருமான வரித் துறையினர் அதிரடி ரெய்டுகளை நடத்தியது நினைவிருக்கலாம்.
இந்த ரெய்டுகளின் போது இருவரது வீடுகளிலிருந்தும் ஏராளமான சொத்துக்களின் ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளனர். இதில் ப்ரியங்கா சோப்ராவின் சொத்துக்கள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ப்ரியங்காவுக்கு மும்பை மற்றும் புறநகர்களில் மட்டும் 11 வீடுகளும் ஃப்ளாட்டுகளும் இருப்பது தெரியவந்துள்ளது.
இவற்றில் மும்பை வெர்சோவாவில் ராஜ் க்ளாஸிக் எனும் அபார்ட்மெண்டில் மட்டும் 5 ஃப்ளாட்டுகள் உள்ளனவாம். இவற்றில் மூன்றை இணைத்து ஒரே வீடாக்கியுள்ளார். மும்பையில் நிலம் மற்றும் வீடுகளின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு மிக உச்சத்தில் உள்ளது. எனவே இந்த சொத்துக்களை வாங்க அவருக்கு எந்தெந்த வழிகளில் பணம் வந்தது என ஆய்வு செய்து வருகின்றனர் அதிகாரிகள்.
கத்ரீனா கைப் வீட்டிலிருந்து பல கோடி டெபாசிட் ரசீதுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றை மேடை நிகழ்ச்சிகள் மூலம் சம்பாதித்ததாக கத்ரீனா கூறியுள்ளார். இதுகுறித்தும் ஆய்வு நடக்கிறது.