Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரஜினிக்கு இலியானா நோ?
மலையாளத்தில் வெளியான கத பறயும் போள் படத்தின் ரீமேக் தமிழில் குசேலன் என்ற பெயரில் உருவாகிறது. பி.வாசு இயக்கவுள்ளார். ரஜினியும், பசுபதியும் நாயகர்களாக நடிக்கவுள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் உருவாகிறது. தமிழில், ரஜினிக்கு ஜோடியாக நயனதாரா நடிக்கவுள்ளார். பசுபதிக்கு இன்னும் ஜோடி முடிவாகவில்லை.
தெலுங்குப் பதிப்புக்கு ரஜினிக்கு ஜோடியாக நடிக்க சில நாட்களுக்கு முன்பு தெலுங்குத் திரையுலகில் முன்னணியில் உள்ள இலியானாவை பி.வாசு அணுகியுள்ளார். ஆனால் தனக்குப் பொருத்தமானதாக கேரக்டர் இல்லை என்று கூறி இலியானா மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதையடுத்து நயனதாராவையே தெலுங்கிலும் ரஜினிக்கு ஜோடி சேர்க்க முடிவாகயுள்ளதாம். இதுதொடர்பாக அவரிடம் வாசு பேசி வருவதாக கூறப்படுகிறது.
தமிழில் பசுபதி நடிக்கும் கேரக்டரில் தெலுங்கில் ஜெகபதி பாபு செய்யவுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பின் ஷூட்டிங் பிப்ரவரி 15ம் தேதி ஒரே நேரத்தில் தொடங்குகிறதாம்.