Don't Miss!
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை!-ஸ்ரேயாவின் அக்கறை
தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்து, பின் இந்தி, ஆங்கிலம் என வெவ்வேறு மொழிகளில் ஒரு ரவுண்ட் வந்த ஸ்ரேயைவுக்கு தமிழில் இப்போது கைவசம் உள்ள படம் ரவுத்திரம். ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்திப் பட உலகில் அதிகம் இருப்பதுபோல தன்னைக் காட்டிக் கொள்கிறார் ஸ்ரேயா. அப்படியும் வாய்ப்பு மட்டும் எட்டாக் கனியாகவே உள்ளது. எனவே ஓய்வு நேரத்தில் யோகா, பொது நலப் பணிகள் என உபயோகமாகக் கழிக்க முடிவு செய்துள்ளார்.
இப்போது பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்து உதவுமாறு பேட்டிகள் கொடுத்து வருகிறார் ஸ்ரேயா.
சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "பார்வையற்றோருக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்திட வேண்டும். அவர்களுக்கு கல்வி கற்பிப்பதன் மூலம் புதிய வழிகளைத் திறக்கலாம்.
போதிய கல்வி மற்றும் பயிற்சிகள் அளித்து வேலைவாய்ப்புகளையும் அவர்களுக்கு உருவாக்கித் தரவேண்டும். வருத்தமான விஷயம் என்னவென்றால் யாருமே பார்வையற்றோருக்கு வேலை கொடுப்பதில்லை. சமூகம் அவர்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஏற்றத்தாழ்வு நீங்கும். என்னால் முடிந்த அளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் முயற்சிகளையும் மேற்கொள்வேன்," என்றார்.
ஏற்கெனவே சில ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து கல்வி உதவி அளித்து வருகிறார் ஸ்ரேயா என்பது குறிப்பிடத்தக்கது.
படங்களில் அதிகம் தலை காட்டுவதில்லையே என்று கேட்டதற்கு, "நானாகத்தான் குறைத்துக் கொண்டேன். நல்ல கதை, பேசப்படும் அளவுக்குப் பாத்திரம்... இதுதான் முக்கியம். பணம் பெரிதல்ல...", என்றார்.