எப்படிப் பார்த்தாலும் அழகுதான்…கவர்ச்சி உடையில் கண்டபடி கவர்ச்சி காட்டிய தர்ஷா குப்தா!
சென்னை : நடிகை தர்ஷா குப்தா கருப்பு சேலையில் ததும்ப ததும்ப கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவைப் பார்த்து ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்றவர்களில் தர்ஷா குப்தாவும் ஒருவர். தற்போது யோகிபாபு ஜோடியாக மெடிக்கல் மிராக்கில் என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா பதிவிடும், புகைப்படங்கள் மற்றும் வீடியோவிற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

தர்ஷா குப்தா
கோயம்புத்தூரில் பிறந்த தர்ஷா குப்தா, கல்லூரியில் படிக்கும்போதே, மாடலிங்கில் ஆர்வம் இருந்ததால்,சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்துள்ளார். அதன்பிறகே நடிப்பிற்கான வாய்ப்பை பெற்றார். ஆனால் இவருக்கு முதலில் வாய்ப்பு கிடைத்தது என்னவோ சின்னத்திரை சீரியல்களில்தான். ஜீ தமிழ் சேனலில் இவர் நடித்த முள்ளும் மலரும் சீரியல் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது.

யோகிபாபு படத்தில்
இதைத்தொடர்ந்து, மின்னலே, செந்தூரப் பூவே போன்ற சில சீரியல்களில் நடித்தார். விஜய் டிவியில் குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு மேலும் பல ரசிகர்களின் மனதை கவர்ந்தார். குத் வித் கோமாளியில் புகழுடன் இவர் சேர்ந்து செய்த கலாட்டாவுக்கு அளவே இல்லை. சீரியலில் மட்டும் நடித்து வந்த தர்ஷா குப்தா தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். ருத்ரதாண்டவம் என்ற படத்தில் நடித்த இவர் தற்போது யோகி பாபுவின் படமான மெடிக்கல் மிராக்கில் படத்தில் நடித்து வருகிறார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் தர்ஷா குப்தா. தொடர்ந்து டிக்டாக் வீடியோக்கள், பாடல்களுக்கு நடனமாடும் வீடியோக்கள், போட்டோஷுட்கள் என்று இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் எப்போதுமே கலர்புல்லாகவே இருக்கும். அந்த அளவிற்கு ஃபுல் எனர்ஜியோடு இவர் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாகவே வைத்து இருக்கிறார்.

எப்படிப் பார்த்தாலும் அழகுதான்…
சமீபத்தில் தர்ஷா குப்தா கருப்பு சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்த போட்டோவை ஷேர் செய்த இவர், இதற்கு கேப்ஷனாக "கருப்பின் மந்திரமும் மாயமும் என்னை வியக்கத் தவறுவதில்லை" என்று பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேல் லைக்குகளை பெற்றது. தற்போது, அதே கருப்பு புடவையில் முந்தானை இல்லாமல் மொத்த அழகையும் காட்டி உள்ளார். இந்த போட்டோவைப்பார்த்த ரசிகர்கள் 'கருமேகங்களுக்கு நடுவே இருக்கும் மழைத்துளியை போல கருப்பு உடையிலே உள்ளிருக்கும் அழகே பேரழகே' அவரை வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











