Don't Miss!
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- News லோக்சபா தேர்தல்: தமிழ்நாட்டில் "அதிக முறை" சரித்திரம் படைத்தவர்கள் யார் யார் தெரியுமா? இதோ லிஸ்ட்!
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Lifestyle ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? இந்த 5 ஆயுர்வேத வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகை ஜோதிர்மயி கார் விபத்தில் சிக்கினார் - மயிரிழையில் உயிர்பிழைப்பு
கொச்சி: தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள நடிகை ஜோதிர்மயி கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பினார்.
தமிழில் தலைநகரம், நான் அவன் இல்லை உள்பட பல்வேறு தமிழ் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை ஜோதிர்மயி. கேரளாவைச் சேர்ந்த இவர் ஏராளமான மலையாள படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருக்கும், மலையாள இயக்குனர் அமல்நீரத்துக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கொச்சியில் வசித்து வந்த இவர்கள் மாகே பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு நேற்று காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
கொங்கிபள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த பஸ் இவர்களின் கார் மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் நடிகை ஜோதிர்மயி மற்றும் அவரது கணவர் அமல்நீரத் இருவரும் காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.
விபத்து பற்றி தெரிய வந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டு வேறு காரில் கொச்சிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.