Just In
- 7 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 7 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 7 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 7 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நீதிமன்றத்தில் நடிகை கனகா ஆஜர்!

'கரகாட்டக்காரனி'ல் அறிமுகமாகி, ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் கனகா. மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள். இவர், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார்.
சென்னை அடையாறு பகுதியில், ஆவிகளுடன் பேசும் நிலையத்தை நடத்தி வருபவர் அமுதா. நடிகை கனகா, தனது தயார் தேவிகா ஆவியுடன் பேசுவதற்காக, அமுதா வீட்டிற்கு சென்று பழகியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் பணிபுரியும் கம்ப்யூட்டர் எஞ்ஜினியருடன் கனகாவுக்கு ரகசிய திருமணம் நடந்துள்ளது. சில மாதங்களில் கனகாவை விட்டு, அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.
தனது கணவர் பிரிந்து செல்வதற்கு, அமுதாதான் காரணம் என்று, கனகா குற்றம்சாட்டினார். கனகாவின் கணவருக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என அமுதா மறுத்தார்.
தனது புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், கனகாவின் குற்றச்சாட்டு அமைந்துள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவதூறு வழக்கு ஒன்றை சைதாப்பேட்டை கோர்ட்டில் அமுதா தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே அமுதா வாக்குமூலம் அளித்து விட்டார். அவரது நிறுவனத்தை சேர்ந்த, இரண்டு ஊழியர்கள் மட்டும் வாக்குமூலம் அளிக்க வேண்டும். இந்நிலையில் செவ்வாய்கிழமை சைதாப்பேட்டை 23வது கோர்ட்டில் கனகா ஆஜரானார். இவ்வழக்கை ஏப்ரல் மாதம் 9ம்தேதிக்கு தள்ளிவைக்க மாஜிஸ்திரேட் அகிலா ஷாலினி உத்தரவிட்டுள்ளார்.