Kiran: இதுதான் ஜலபுல ஜங்கா? மொத்த அழகும் தெரிய பிகினியில் கவர்ச்சி காட்டிய நடிகை கிரண்!
சென்னை: வனிதா விஜயகுமார் இயக்கி, நடித்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் "சிவராத்திரி தூக்கம் ஏது" என இறங்கி ஆட்டம் போட்ட நடிகை கிரணுக்கு அதற்கு பிறகு, எந்த படத்திற்கும் வாய்ப்பு வராததால், கவர்ச்சி ஆட்டம்போடவாது எனக்கு வாய்ப்பு கொடுங்கேளே என சொல்லாத குறையாக, தண்ணீருக்கு நடுவே பிகினியில் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இளசுகளை உசுப்பேத்தி உள்ளார்.
மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை கிரண், இந்தி படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க வந்தார். அந்த படத்தை தொடர்ந்து சியான் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மாராட்டி குடும்பத்தை சேர்ந்த பெண் கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தி இருந்தார் கிரண். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படத்தில் இடம் பெற்ற ஓபோடு பாடல் பட்டிதொட்டி எங்கும் கிரணை கொண்டு சென்றது. அந்த படத்தை தமிழில் அன்பே சிவம், வின்னர், வில்லன் போன்ற நடித்து வந்தார். இவர் தமிழில் படம் மட்டுமல்ல சில இந்தி மொழி ஆல்பம் பாடல்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வந்து கொண்டு இருந்தார்.

நடிகை கிரண்: கமல்ஹாசன், விக்ரம், அஜித் என டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த கிரண், காதல் தோல்வியால் சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு பல படவாய்ப்புகள் வந்தன ஆனால், அதை அவர் தவறவிட்டதாக அண்மையில் ஷகிலாவிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதாவது, கில்லி படத்தில் த்ரிஷாவின் கதாப்பாத்திரத்தில் நடிக்க முதலில் கிரணை கேட்டுள்ளார்கள். ஆனால், மன அழுத்தத்தில் இருந்ததால், வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அது நான் செய்த மிகப்பெரிய தவறு. காதல் தோல்வியில் இருந்து நான் மீண்டு வருவதற்குள், என் மார்க்கெட் போய்விட்டது. அப்போது பட வாய்ப்பு தேடி அலைகிறேன் ஆனால், பட வாய்ப்பு வரவில்லை என வேதனையுடன் பேசி இருந்தார். பட வாய்ப்பு தேடி அலைந்த கிரண், விஜய்யின் திருமலை படத்தில் வாடியம்மா ஜெக்கம்மா பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி இருந்தார். தெலுங்கிலும் கூட சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருக்கிறார். நடிகை கிரணுக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாததால், ஹீரோயினாக நடித்து வந்த இவர், ஆம்பள படத்தில் ஆண்டியாக நடித்தார்.
கவர்ச்சி போட்டோஸ்: சினிமாவில் நிலையான ஒரு இடத்தைபெற வேண்டும் என்றாலும், பட வாய்ப்பு வர வேண்டும் என்றாலும், அதற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்ட நடிகை கிரண், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி வீடியோ மற்றும் போட்டோவை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். தற்போது, நடிகை கிரண் ரத்தோட் இன்ஸ்டாகிராமில் தண்ணீருக்கு நடுவில் நீச்சல் உடையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த கிரணின் ரசிகர்கள் சிலர் இது தான் ஜலபுல ஜங்கா என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நடிகை கிரணை இன்ஸ்டாகிராமில் மட்டும், மூன்று புள்ளி ஐந்து மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இதன் மூலம் நடிகை கிரண் வருமானத்தை ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











