Don't Miss!
- News விடிவுகாலம்.. தேர்தல் முடிந்ததும் சென்னையின் முக்கிய பகுதி அடியோடு மாறுகிறது.. பிரம்மாண்ட பாலம் ரெடி
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கணவரை நினைத்து உருகிய நடிகை மீனா… துணிந்து எடுத்த அதிரடியான முடிவு: அதிர்ச்சியில் ரசிகர்கள்
சென்னை: தமிழில் முன்னணி நடிகையாக வலம்வந்த மீனா, இப்போதும் சில படங்களில் நடித்து வருகிறார்.
மீனாவின் கணவர் வித்யாசாகர் சில தினங்களுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார்.
இதனையடுத்து கணவரை நினைத்து உருகிய மீனா தற்போது அதிரடியாக முடிவெடுத்துள்ளார்.
மீண்டும் அந்த குழந்தை சிரிப்பு..சோகத்திலிருந்து மீண்ட மீனா.. ஃபிரண்ட்ஷிப் டேயில் ஆதரவளித்த தோழிகள்
குழந்தை நட்சத்திரம் டூ ஹீரோயின்
1982 முதல் சினிமாத் துறையில் பயணித்து வரும் மீனா, சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். நடிப்பில் அவருக்கு இருந்த ஆர்வம், பின்னாளில் ஹீரோயினாக மாற வழிவகுத்தது. தெலுங்கில் பல படங்களில் நாயகியாக நடித்திருந்த மீனாவுக்கு, தமிழில் 'என் ராசாவின் மனசிலே' படம் மிகப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் ஒரு ரவுண்டு வரத் தொடங்கினார்.
முன்னணி நடிகர்களுடன் ஜோடி
'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த மீனா, பல ஆண்டுகள் கழித்து 'எஜமான்' படத்தில், ரஜினிக்கே ஜோடியானார். ரஜினி மட்டும் இல்லாமல் விஜய்காந்த், கமல், பிரபு, சரத்குமார், சத்யராஜ், கார்த்திக், பார்த்திபன், முரளி என, 90களின் டாப் ஸ்டார்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்தார்.
வித்யாசாகருடன் திருமணம்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக இருந்த மீனா, சாப்ட்வேர் இன்ஜினியரான வித்யாசாகரை 2009ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற குழந்தையும் பிறக்க, திருமண வாழ்க்கையை சந்தோஷமாகவே கழித்துவந்தார். அதேநேரம், மோகன்லாலுடன் திரிஷ்யம், ரஜினியுடன் 'அண்ணாத்தே' என மீண்டும் நடிப்பில் பிஸியானார்.
கணவரை நினைத்து உருக்கம்
இந்நிலையில், யாரும் எதிர்பாராத நேரத்தில் மீனாவின் கணவர் வித்யாசாகர், உடல்நிலை சரியில்லாமல் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். உடல் உறுப்புகள் செயலிழந்ததால் வித்யாசாகர் பல மாதங்களாக சிகிச்சையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. கணவரை இழந்த மீனா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்.
உடல் உறுப்புகள் தானம்
இந்நிலையில், சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி, மீனா தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மீனா, "என் கணவர் வித்யாசாகருக்கு உறுப்புகள் தானம்செய்ய யாராவது முன்வந்து இருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார். என் வாழ்க்கையும் மாறி இருக்கும். ஒருவர் உறுப்பு தானம் செய்வது மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கிறது. இதன் முக்கியத்துவத்தை நான் உணர்ந்து கொண்டேன். அதனால் எனது உடல் உறுப்புகளை நான் தானம் செய்கிறேன்." என அறிவித்துள்ளார். அவரின் இந்தப் பதிவு ரசிகர்களை அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.