Don't Miss!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- News சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பாஜகவின் நடிகர் எஸ்.வி.சேகர் திடீர் ஆதரவு? பரபர ட்வீட்!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதபோது காளி, துர்காவை வணங்குவது சரியா?: நடிகை கேள்வி
ஹைதராபாத்: மலையாள நடிகை மானபங்கப்படுத்தப்பட்டது குறித்து நடிகை லட்சுமி மஞ்சு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
பிரபல மலையாள நடிகை படப்பிடிப்பில் இருந்து வீடு திரும்பிய போது காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். இந்நிலையில் இது குறித்து தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு நீண்ட கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
மலையாள நடிகை
மலையாள நடிகை ஒருவர் கடத்தி, மானபங்கப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாம் இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். அவரின் நிலையை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
கடவுள்
நம் நாட்டில் ஒன்று பெண்களை கடவுளாக வணங்குகிறார்கள் அல்லது வீட்டிற்குள் வைத்து பூட்டுகிறார்கள். அதிர்ஷ்டசாலிகள் தாயாக, தாரமாக மதிக்கப்படுகிறார்கள். அவ்வளவு தானா பெண்கள்?
கடவுள் லட்சுமி
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நேரத்தில் கடவுள் லட்சுமி, பார்வதி, துர்கா, சரஸ்வதி மற்றும் காளியை தொடர்ந்து வணங்குவது சரியா?
பெண்கள்
பல பெண்கள் மானபங்கப்படுத்தப்படுதல், பலாத்காரம் செய்யப்படுதல், அவமதிக்கப்படுதல் உள்ளிட்ட செய்திகளை காலையில் எழுந்து செய்தித்தாள்களில் படிப்பது சாதாரணமாகிவிட்டது.
கடைசி
மலையாள திரையுலக உறுப்பினருக்கு நடந்த சம்வம் முதலும் அல்ல இதுவே கடைசியும் அல்ல. நான் எவ்வளவு பாதுகாப்பு இல்லாமல் உணர்கிறேன் என்பதை இந்த தருணத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். தெருவில் தனியாக செல்ல, அரசு போக்குவரத்தில் பயணம் செய்ய, தெருவில் பசங்க கும்பலாக இருந்தால் நடந்து செல்ல, நமக்கு பிடித்த உடை அணிய பயப்படுகிறோம்.
தீர்வு
இருட்டிவிட்டால் வீட்டில் இருக்க வேண்டும், மது அருந்தக் கூடாது, ஒழுங்காக உடை அணிய வேண்டும், புகைப்பிடிக்கக் கூடாது, அதிகம் சிரிக்கக் கூடாது என்று பெண்களிடம் கூறுவது தீர்வாகாது. நாம் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும், எது சரி என்பதை புரிந்து கொள்ள வேண்டும், நல்ல எதிர்காலத்திற்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார் லட்சுமி.