Don't Miss!
- News சீமானின் மைக் சின்னத்தை முன்வைத்து பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' நாடகம்!
- Sports RR VS DC - பேட்ஸ்மேன்களை குறை சொன்ன ரிஷப் பண்ட்.. பவுலிங்கில் அந்த வீரரும் சொதப்பிவிட்டார் என குட்டு
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
கேள்வி கேட்ட நிருபரை பளார் என அறைந்த பிரியா மணி...!
ஹைதராபாத்: ஏன் அயிட்டம் பாடல்களில் தொடர்ந்து ஆடுகிறீர்கள்? என்று கேட்ட தெலுங்கு நிருபரை நடிகை பிரியாமணி ஓங்கி கன்னத்தில் அறைந்தார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த விவகாரம் தற்போது தெலுங்குத் திரையுலகில் மாபெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழில் உள்ளம் என்னும் படத்தில் நாயகியாக அறிமுகமான நடிகை பிரியாமணி, இயக்குநர் பாரதிராஜாவின் கண்களால் கைது செய் படம் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலமானார்.
நடிகர் கார்த்தியுடன் இவர் இணைந்து நடித்த பருத்திவீரன் திரைப்படம் பிரியாமணிக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் பிரியாமணிக்கு சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் எதுவும் இல்லை.
இதனால் கூடிய விரைவில் திருமணம் செய்துக் கொள்ளும் முடிவில் இருக்கிறார் பிரியாமணி. இந்நிலையில் சமீபத்தில் ஒரு தெலுங்கு செய்தியாளர் பிரியாமணியிடம் ஏன் ஐட்டம் பாடலில் எல்லாம் ஆடுகிறீர்கள், திரையில் தோன்றுவதற்காக இந்தப் பாடலை ஓகே என சொல்லிவிட்டீர்களா? எனக் கேட்க இதில் எரிச்சல் அடைந்த பிரியாமணி அவரை அடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் ஒரு கேள்வியைக் கேட்கும் முன் யோசித்து கேளுங்கள் என கூறியதாகவும் சொல்லப்படுகிறது.இது தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்சமயம் இரு கன்னடப் படங்களில் நடித்து வரும் பிரியாமணி தெலுங்கில் இயக்குநர் திரிவிக்ரமின் பன்னி படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு ஆடவிருக்கிறார். இதைக் கேட்கப்போய்த்தான் தெலுங்கு செய்தியாளர் அடி வாங்கினாராம்.
பிரியாமணி இவ்வளவு கோபக்காரரா? தெரியாமப் போச்சே...
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
ஒரே தேதியில் இரண்டு இழப்புகள்.. சந்தானத்துக்கு உச்சக்கட்ட வேதனை.. ரசிகர்கள் ஆறுதல்
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!