Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
குடும்பத்தில் புதுவரவு... மகிழ்ச்சியில் திளைக்கும் ராணி முகர்ஜி
சென்னை: பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்த நடிகை ராணி முகர்ஜி விரைவில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக மாறப் போகிறார்.
இந்தத் தகவலை அவரது உறவினர் ஜோதி முகர்ஜி உறுதிபடுத்தி இருக்கிறார். கடந்த ஆண்டு இயக்குநர் ஆதித்யா சோப்ராவை மணந்து கொண்ட ராணி முகர்ஜி, சமீபத்தில் வெளியான மர்தாணி படத்தின் மூலம் பாலிவுட்டில் மறுபிரவேசம் செய்தார்.
தொடர்ந்து வேறு எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகாத நிலையில் தனது திருமண வாழ்க்கைக்கு அடையாளமாக ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார் ராணி முகர்ஜி.
அடுத்த வருடம் 2016 ஜனவரி மாதத்தில் ராணி முகர்ஜிக்கு குழந்தை பிறக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர், மர்தாணி படத்திற்குப் பின்பு புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளாத ராணி முகர்ஜி தற்போது இந்த சந்தோஷ தருணத்தை லண்டனில் தன் கணவருடன் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்.