ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி விட்டேன்- திரிஷா
சென்னை: எனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி விட்டேன் என நடிகை திரிஷா பெருமையுடன் தெரிவித்திருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரை நட்சத்திரங்கள் பலரும் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்களது வாக்கினைப் பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் வாக்களித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து, ரசிகர்கள் மத்தியில் வாக்களிப்பு பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
நடிகை திரிஷா சென்னை புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலைப் பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். வாக்களித்து வெளியே வந்தவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ''நான் எனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி விட்டேன்.
அனைவரும் வாக்களிக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











