ஆம்பளையா மாறிய வரலட்சுமி சரத்குமார்.. கண்ட இடத்துல கை வச்சி. என்ன பண்றாரு பாருங்க!
சென்னை: நாளுக்கு நாள் பெண்கள் மீதான வன்கொடுமை அதிகரித்து வருவதை அடுத்து. அதை கண்டிக்கும் வகையில், நடிகை வரலட்சுமி சரத்குமார் வித்தியாசமான முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளார். அதாவது பெண்கள் ஆண்களை போல மாறினால் என்ன நடக்கும் என்பதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரையை மாணவி ஒருவர் கோவையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த மாணவி ஆண் நண்பருடன் காரில் வெளியே சென்றுள்ளார். இவர்கள் விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருத்தாவன் நகர் பகுதியில் காரை நிறுத்திவிட்டு காருக்கு இரவில் 11 மணியளவில் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். இப்போது அந்த வழியாக வந்த 3 பேர், ஆண் நண்பரை ஆயுதத்தால் அடித்துவிட்டு, இந்த மாணவியை தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குணா, சதீஸ், கார்த்திக் என்ற மூன்று பேரை போலீசார் காலில் சுட்டுப்பிடித்து கைது செய்தனர்.

ஆம்பளையா மாறிய வரலட்சுமி: நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தற்போது சோஷியல் மீடியாவில் பேசு பொருளாக இருக்கும் நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் அவர்கள், ஒரு நாளைக்கு ரோல் ரிவர்சஸ்.. பெண்கள் ஆண்களைப் போல நடந்து கொண்டால் எப்படி இருக்கும்.. ஒரு யோசனை என ஆண் நடந்து செல்லும் போது, சரியான நாட்டுகட்டடா என்றும், ஆண்கள் குனியும் போது இந்த இடத்தை பார்த்து ரசிப்பதும், ஆண் பின்னாடியே நடந்து சென்று சேட்டை என ஆண்கள் பெண்களுக்கு என்னென் செய்வார்களே இதை அப்படியே ஆண்போல செய்துள்ளார். இதைப்பார்த்த பலர், ஆண்கள் எத்தனை முறை சொன்னாலும் திறந்த மாட்டார்கள் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து இருக்கும் வரலட்சுமி தனது சகோதரி பூஜா சரத்குமாருடன் சேர்ந்து, தோசா டைரீஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், சரஸ்வதி படத்தை வரலட்சுமி இயக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











