கணவர், குழந்தையுடன் உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்ட வீணா மாலிக்!
மும்பை: பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் சர்ச்சை நாயகி வீணா மாலிக் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் உம்ரா புனிதப் பயணம் போயுள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் வீணா மாலிக். இந்தியில் புகுந்து அதி பயங்கர கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர். திடீரென அவர் நடிப்பை விட்டு விட்டு பாகிஸ்தானுக்குத் திரும்பினார். அசாத் பசீர் கான் என்பவரை மணந்து கொண்டு இல்லற வாழ்க்கையில் நுழைந்தார்.

இந்தத் தம்பதிக்கு தற்போது அப்ராம் கான் என்ற ஏழு மாதக் குழந்தை உள்ளது. தங்களது குழந்தையுடன் வீணாவும், அவரது கணவரும் உம்ரா புனித யாத்திரை போயுள்ளனர்.

ஒவ்வொரு முஸ்லீமின் கனவே உம்ரா அல்லது ஹஜ் யாத்திரையை வாழ்நாளில் ஒருமுறையாவது நிறைவேற்றி விட வேண்டும் என்பதுதான். இது எல்லோருக்கும் கை கூடி வந்து விடாது என்பதால் இந்த வாய்ப்பு கிடைத்தோர் புண்ணியம் செய்தவர்கள் என்று கூறுவார்கள்.
இந்த நிலையில் 2வது முறையாக சமீபத்தில் உம்ரா கடமையை முடித்துள்ளார் வீணா. இதுகுறித்து அவர் கூறுகையில், புனித கப்பாவில் வழிபட்டதை பெருமையாக கருதுகிறேன். மனசெல்லாம் நிறைந்துள்ளது. அல்லாவிடம், எனது குடும்பத்தையும், என்னையும், எனது சமூகத்தையும் காக்குமாறு வேண்டிக் கொண்டேன். இந்தியா, பாகிஸதானில் வாழும் அனைத்து மக்களும் அமைதி, நிம்மதி, வளர்ச்சியுடன் திகழ வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டேன் என்றார் வீணா.

சவூதியில் ஒரு வாரம் தங்கும் வீணா மாலிக் குடும்பத்தினர் மதீனா பார்க்குக்குக்கும் செல்கஇறார்கள். அதன் பின்னர் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மத வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்ற பிந்னர் பாகிஸதான் திரும்புவார்களாம்.


Click it and Unblock the Notifications











