twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ''நடிகைகளுக்கு மதிப்பே கிடையாது. ஒரு பொருட்டாக கூட பார்க்க மாட்டார்கள்”: தமன்னாக்கு என்னாச்சு?

    |

    மும்பை: தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் தமன்னா.

    'பாகுபலி' படத்தின் மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகையானார் தமன்னா.

    ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் தமன்னா.

    விருமன் முதல் பொன்னியின் செல்வன் வரை...ரிலீசுக்கு காத்திருக்கும் 7 மெகா பட்ஜெட் படங்கள் இதோ விருமன் முதல் பொன்னியின் செல்வன் வரை...ரிலீசுக்கு காத்திருக்கும் 7 மெகா பட்ஜெட் படங்கள் இதோ

    பாலிவுட்டில் இருந்து கோலிவுட்

    பாலிவுட்டில் இருந்து கோலிவுட்

    தமிழில் அறிமுகமாகும் பெரும்பாலான நடிகைகள், இங்கிருந்து இந்தி திரையுலகம் செல்ல அதிகம் முயற்சி செய்வதுண்டு. ஆனால், பாலிவுட்டில் அறிமுகமாகி, தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கிய தமன்னா, 2006ல் வெளியான 'கேடி' படத்தின் மூலம் கோலிவுட்டிலும் அடியெடுத்து வைத்தார். அன்று முதல், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார்.

    கார்த்தியுடன் காதல்!!

    கார்த்தியுடன் காதல்!!

    வியாபாரி, கல்லூரி, தனுஷுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நாயகியாக அசரடித்த தமன்னா, தெலுங்கிலும் பிஸியாக நடித்து வந்தார். கார்த்தியுடன் பையா, சிறுத்தை, தோழா என அடுத்தடுத்து லவ்லி பேபியாக ரசிகர்களை வசீகரித்த தமன்னாவுக்கு, கார்த்தியுடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டது.

    பாகுபலி கொடுத்த அங்கீகாரம்

    பாகுபலி கொடுத்த அங்கீகாரம்

    தமிழில் விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் என நல்ல படங்களில் நடித்திருந்த தமன்னாவிற்கு, ஒரேயொரு படம் மிகப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ரானா, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமாக உருவான ';பாகுபலி' படத்தில், பிரபாஸ்க்கு ஜோடியாகவும், துணிச்சலான பாத்திரத்திலும் நடித்து, சர்வதேச அளாவில் புகழ்பெற்றார்.

    ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக?

    ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக?

    இந்நிலையில், தமிழில் கொஞ்சம் இடைவேளி விட்டுள்ள தமன்னாவிற்கு, ஜாக்பாட் ஒன்று அடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில், ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் சொல்லப்படுகிறது.

    நாயகிகளுக்கு மரியாதையே இல்லை

    நாயகிகளுக்கு மரியாதையே இல்லை

    சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த தமன்னா, ''சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே கிடையாது. எங்கள் பேச்சை ஒரு பொருட்டாக கூட பார்க்க மாட்டார்கள்" என மிகக் காட்டமாகக் கூறியதாக தெரிகிறது. மேலும், "ஹீரோவை விட நாயகிகளுக்கு சம்பளம் குறைவாக வழங்கப்படுவதாகவும்,. இது சினிமா தோன்றியதில் இருந்தே தொடர்கிறது'' என்றும் குறிப்பிட்டுள்ளார். 'நாயகிகளின் போட்டோ பட போஸ்டர்'களில் வருவதே பெரிய விஷயம். என்றும், சினிமா ப்ரோமோஷனுக்கு ஹீரோக்கள் வராமல் இருந்தால் காரணம் சொல்வார்கள். ஆனால், நாயகி என்றால் குறைகூறுவார்கள்" எனவும் பேசியதாக சொல்லப்படுகிறது.

    English summary
    Tamannaah has said that actresses are not valued in cinema and they will not see what we are talking about ( சினிமாவில் நடிகைகளுக்கு சுத்தமாக மதிப்பே இல்லை எனவும், நாங்கள் பேசுவதை ஒருபொருட்டாகவே பார்க்க மாட்டார்கள் என்றும் நடிகை தமன்னா தெரிவித்துள்ளார் )
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X