Don't Miss!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- News ராகுல் முதல் டிகே சிவக்குமார் தம்பி வரை.. 2ம் கட்ட தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் இவர்கள் தான்!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அதிதியின் சாரதீ
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரிதயாரிக்கும் சாரதீ என்ற படத்தில் அறிமுகமாகிறார்அதிதி. இவர் தெலுங்கு திரையுலகின் முன்னணிநாயகி ஆர்த்தி அகர்வாலின் தங்கை.
படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது செளத்ரியின்இரண்டாவது மகன் ரமேஷ். முதல் மகன் ஜீவாவைவைத்து செளத்ரி எடுத்த படங்கள் கையைசுட்டுவிடவே அவருக்கு கொஞ்சம் ஓய்வுகொடுத்துவிட்டு ரமேஷை ஹீரோவாக்கியுள்ளார்.
இந்த ரமேஷ் தெலுங்கில் ஏற்கனேவ வித்யார்த்தி உள்பட ஒரு சில படங்களில் நடித்தவர் தான். தமிழிலும்வின்சென்ட் செல்வாவின் இயக்கத்தில் ஜித்தன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படம்எப்போது முடியும் என்று தெரியவில்லை.
அதே போல அதிதியும் தனது அக்கா ஆர்த்தியின் சிபாரிசால் தெலுங்கில் திறமை காட்டிக் கொண்டிருப்பவர் தான்.ஆனால், அக்கா அளவுக்கு அங்கு முன்னுக்கு வர முடியாமல் தவித்து வரும் அதிதியை தமிழுக்கு அழைத்துவந்துள்ளது சூப்பட் குட் பிலிம்ஸ்.
சாரதீ ஒரு ஆக்ஷன் கலந்த ஹோம்லி சப்ஜெக்ட் கதையாம். படத்தை இயக்குவது பாலு. இவர் இயக்குனர்ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர். அவரது முதல்வன் இந்தி புராஜெக்டில் (அனில் கபூர் நடித்தநாயக்) பணியாற்றியவர். அத்தோடு பல இந்திப் படங்களில் அசோசியேட் டைரக்டாக இருந்துள்ளார்.
தமிழுக்கு இவர் புதுசு தான். ஆனால், திறமைசாலிகளை அடையாளம் கண்டுபிடித்து வாய்ப்பு தருவதில் சூப்பர் குட்பிலிம்ஸ் நிறுவனத்துக்கு இணையான நிறுவனம் தமிழில் எதுவுமில்லை. அந்த வகையில் பாலுவும் சிறப்பான திரைக்கதையைச் சொல்லித் தான் வாய்ப்பு கேட்டாராம்.
கதையில் லயித்த செளத்ரி தனது மகனையே ஹீரோவாக்க முடிவு செய்தார் என்கிறார்கள். படப்பிடிப்பும்உடனடியாக ஆரம்பித்து வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. வழக்கமாக அநாவசிய செலவுகளை தவிர்க்கும்செளத்ரி இதில் தனது மகனுக்காக கோடிகளை கணக்கு வழக்கில்லாமல் எடுத்து விட்டுக் கொண்டிருக்கிறார்.
அதிதி தெலுங்கில் கொடுக்கு உள்ளிட்ட சில படங்களில் தலை காட்டியவர் தான் என்றாலும் இதுவரை ஒரு படமும்இவருக்கு கை கொடுக்கவில்லை. இதனால் தமிழ் பக்கமாக போ என்று அக்கா அனுப்பி வைத்திருக்கிறார்.
அதிதி தேறுவாரா.. பார்ப்போம்