துபாயில் ரூ. 54 கோடிக்கு பங்களா வாங்கிய ஐஸ்வர்யா ராய்: 'அவரும்ல' வாங்கிருக்காராம்!
மும்பை: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் துபாயில் ரூ.54 கோடிக்கு சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.
மகள் ஆராத்யாவுக்காக சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய் தற்போது தொடர்ந்து நடிக்கிறார். படங்கள் தவிர விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். விளம்பரங்கள் மூலம் மட்டும் அவர் கோடிக் கணக்கில் சம்பாதித்து வருகிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா துபாயில் சொகுசு பங்களா ஒன்றை வாங்கி உள்ளார். நீச்சல் குளம், ஹோம் தியேட்டர் என சகல வசதிகளும் உள்ள அந்த பங்களாவின் மதிப்பு ரூ. 54 கோடி ஆகும்.
பாலிவுட் பிரபலங்கள் பலரும் தற்போது துபாயில் பங்களா வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஷாருக்கான் துபாயில் பங்களா வாங்கிய நிலையில் ஐஸ்வர்யாவும் பங்களா வாங்கியுள்ளார்.
ஐஸ்வர்யா ராயின் முன்னாள் காதலரான சல்மான் கானும் துபாயில் பங்களா வாங்கியுள்ளார் என்பது அவருக்கு தெரியுமா என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











