Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சரியாக சாப்பிடாமல், தூங்காமல் எப்பொழுதும் சோகமாக இருக்கும் ஐஸ்வர்யா ராய்
மும்பை: தந்தையை நினைத்து ஐஸ்வர்யா ராய் சரியாக சாப்பிடாமல், தூங்காமல் உள்ளாராம்.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் உடல் நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த வாரம் அவரின் நிலைமை கவலைக்கிடமானது.
இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
கவலைக்கிடம்
கடந்த வாரத்தில் இருந்து கிருஷ்ணராஜ் ராய் தீவிர சிகிச்சை பிரிவில் தான் உள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையிலும் அவரது உடல் நலனில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா ராய் தனது தந்தையின் செல்லம். எதுவாக இருந்தாலும் தந்தையிடம் தான் முதலில் கூறுவார். அப்படி இருக்கும்போது தந்தை ஐசியுவில் கவலைக்கிடமாக இருப்பதால் அவர் சோகத்தில் உள்ளார்.
மருத்துவமனை
கிருஷ்ணராஜ் ராயின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் ஐஸ்வர்யா சரியாக சாப்பிடாமல் தூங்காமல் உள்ளார். இரவு நேரத்தில் மருத்துவமனையில் கண்விழித்து பொழுதை கழிக்கிறார்.
அபிஷேக்
ஐஸ்வர்யா ராய் கடந்த சில நாட்களாக தன்னையே மறந்து சரியாக சாப்பிடாமல், தூங்காமல் இருப்பது அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கு கவலை அளித்துள்ளது. இருப்பினும் நிலைமையை புரிந்து கொண்டு அபிஷேக் ஐஸ்வர்யாவிடம் எதுவும் சொல்வது இல்லையாம்.