Don't Miss!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஓரேயோரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- News கோயிலில் பிரார்த்தனை செய்து பிரசாரத்தை தொடங்கிய செஞ்சி மஸ்தான்.. டீ போட்டு வாக்கு சேகரித்தார்
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
கொலவெறியில் பச்சன்கள்: கரண் பட விளம்பர நிகழ்ச்சியை புறக்கணிக்கும் ஐஸ்வர்யா ராய்?
மும்பை: தனது குடும்பத்தார் கோபத்தில் இருப்பதால் ஏ தில் ஹை முஷ்கில் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளை புறக்கணிக்க ஐஸ்வர்யா ராய் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கரண் ஜோஹார் இயக்கத்தில் ரன்பிர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள ஏ தில் ஹை முஷ்கில் படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ரன்பிருடன் மிகவும் நெருக்கமாக நடித்திருப்பது பற்றி தான் பேச்சாக கிடக்கிறது.
அந்த காட்சிகளால் ஐஸ்வர்யா ராயின் வீட்டிலும் பிரச்சனை என்று கூறப்படுகிறது.
பச்சன்கள்
ஐஸ்வர்யா ராய், ரன்பிர் கபூருடன் நெருக்கமாக நடித்திருக்கும் காட்சிகளால் அவரது கணவர் அபிஷேக் பச்சன் அதிலும் குறிப்பாக மாமனார் அமிதாப் பச்சன் கோபத்தில் உள்ளார் என்று செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
ஐஸ்வர்யா
தனது குடும்பத்தார் கோபத்தில் இருப்பதால் ஏ தில் ஹை முஷ்கில் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளை புறக்கணிக்க ஐஸ்வர்யா ராய் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விளம்பரம்
யார், யார் படங்களையோ சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யும் அமிதாப் மற்றும் அபிஷேக் ஐஸ்வர்யா ராயின் ஏ தில் ஹ முஷ்கில் படத்தை கண்டுகொள்ளவே இல்லை.
பிரியங்கா சோப்ரா
ஐஸ்வர்யா ராய் பல ஆண்டுகளாக ஒரு பிரபல அழகு சாதன நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார். இந்நிலையில் அந்த நிறுவனம் ஐஸ்வர்யாவுக்கு பதில் நடிகை பிரியங்கா சோப்ராவை பிராண்ட் அம்பாசிடராக்க உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.